Jul 31, 2013

தமிழகத்தில் தடையை மீறி பான்மசாலா, குட்கா விற்பனை வியாபாரிகள் மீது குண்டர் சட்டம்

சேலம், ஜூலை 31:தமிழகத்தில் தடையை மீறி பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பான்ம சாலா, குட்கா, வாய்ப்புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து அரசு கடந்த மே 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இருப்பு வைத்துள்ள அனைத்து கடைகளும் இது போன்ற பொருட்களை ஒரு மாதத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த கெடு முடிந்ததையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைகளில் பான்மசாலா, குட்கா போன்றவை விற்கப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேலத்தில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் , செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து 5லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் மற்றொரு கடையில் 50 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை மாநகராட்சி குப்பைமேடு பகுதியில் அதிகாரிகள் கொட்டி எரித்தனர்.
இந்நிலையில் பலமுறை எச்சரித்தும் தொடர்ச்சியாக இது போன்ற போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்னர். இது தொடர்பாக சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில், “தமிழகத்தில் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பது சட்டப்படி குற்றம். தமிழகத்தை புகையிலை இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் மீண்டும் விற்கப்பட்டது சோதனையின் போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பான்பாரக், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

சேலத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம், ஜூலை.30-சேலத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புகையிலை பொருட்கள்தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜிக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் திருமூர்த்தி, ஜெகநாதன் உள்பட அதிகாரிகள் சேலம் செவ்வாய்பேட்டை சந்தைபேட்டையில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றனர்.ரூ.50 ஆயிரம் மதிப்பிலான..பின்னர் அதிகாரிகள் அங்கு இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த குடோனின் உரிமையாளர் மதுரை சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் குடோனுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். மேலும் குடோனில் இருந்து வாய் நறுமண பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாதிரி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.சட்டப்படி நடவடிக்கைஇதுகுறித்து நியமன அலுவலர் அனுராதா கூறும் போது, ‘வெளி மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் இதுபோன்ற குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதை அவர்கள் மறைமுகமாக கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றாலோ, பதுக்கி வைத்தாலோ கண்டிப்பாக அவர்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோன்ற பொருட்களை லாரிகளில் ஏற்றி வரக்கூடாது. அவ்வாறு ஏற்றி வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு

சேலம்: சேலத்தில் உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்து, நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம், போதை வஸ்து விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில், கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களில், சேலம் செவ்வாய்ப்பேட்டை, குகை, ஜங்ஷன், அம்மாப்பேட்டை, சின்ன கடை வீதி உட்பட மாநகராட்சி பகுதியில் கைப்பற்றப்பட்ட, புகையிலை உள்பட, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை வஸ்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகள், பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சேலம் டி.ஆர்.ஓ., செல்வராஜ், நேற்று பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகளை பார்வையிட்டார்.
அதன் பின், அவற்றை அழிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி, சேலம் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள், போதை வஸ்துகளை எருமாபாளையம் குப்பை மேடு பகுதிக்கு கொண்டு சென்று, தீயிட்டு அழித்தனர்.

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா பறிமுதல்


சேலம், ஜூலை 30:
சேலத்தில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, பான் மசாலா பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு, வாய் புகையிலை போன்ற பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மே 23ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டையில் உள்ள குடோன் ஒன்றில், போதை பாக்கு பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட நியமன அலு வலர் டாக்டர் அனுராதா தலைமையில், அலுவலர்கள் பாலு, ஜெகன், திருமூர்த்தி ஆகியோர் புகாருக்குரிய குடோனுக்கு நேற்றிரவு சென்றனர். அந்த குடோனில் புதுவிதமான போதை பாக்கு பொட்டலங்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. புகையிலை பொட்டலங்கள், நறுமண பாக்கு என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பாக்கு பொட்டலங்கள் இருந்தன.
சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் போதை பாக்கு பொட்டலங்கள் அடைக்கப்பட்டு முடிச்சு போடப்பட்டு இருந்தது. அவை, சேலம் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இரவு நேரங்களில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. குடோனில் இருந்த போதை பாக்கு, புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 5 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட போதை பாக்குகளை உணவுப் பகுப்பாய்வுக்கூட பரிசோதனைக்காக அதன் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், செவ்வாய்ப்பேட்டை உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குடோன் உரிமையாளர் முனவர் சிங் தடை மீறி போதை பொருட்களை விற்பனை செய்து வருவதால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்,” என்றார். இதைதொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

சேலத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலத்தில் ரூ. 10.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்கு போன்றப் பொருள்களை, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தி. அனுராதா, திங்கள்கிழமை பறிமுதல் செய்தார்.
 தமிழகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு புகையிலை, போதை தரும் பாக்கு வகைகளுக்கு அரசு தடை விதித்தது. இதையடுத்து, சில்லரை வியாபாரிகள் அவற்றை விற்பனை செய்யக் கூடாது என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்களிடம் உள்ள பொருள்களை ஜூன் 22-ஆம் தேதிக்குள் அழித்துவிட வேண்டும் என்றும் அவகாசம் வழங்கப்பட்டது.  அவகாசம் முடிந்த நிலையில், ஜூன் 22-ஆம் தேதியில் இருந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், கடை வீதி, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள், மொத்த வியாபாரிகளிடம் இருந்து புகையிலை, பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 அதேபோல, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள முருகானந்தம் என்பவருக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் திங்கள்கிழமை சோதனை செய்தனர். '
அப்போது, அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கிடைத்த தகவலின்படி, மாலை செவ்வாய் பேட்டை பிரதானச் சாலையில் மொத்த விற்பனையாளர் கிடங்கில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர். இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான புகையிலை, போதை பாக்குகள் போன்ற பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
 இதுகுறித்து அனுராதா கூறியது:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற பல்வேறு சோதனைகள் மூலம் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களும், சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை காலை செவ்வாய்பேட்டையில் கிடங்கில் சோதனை செய்ததில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும், மாலை நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்களின் விற்பனை குறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த சோதனைகள் மேலும் தொடரும் என்றார் அவர்.

Banned pan masala products seized


Banned gutka and pan masala products seized by health officials being destroyed at Erumapalayam compost yard in Salem on Tuesday.– PHOTO: P. GOUTHAM
Banned gutka and pan masala products seized by health officials being destroyed at Erumapalayam compost yard in Salem on Tuesday
In a major drive against selling of banned gutka, panmasala, and other tobacco items, health officials on late Monday night seized goods worth Rs. 5 lakh kept in a godown for distribution.
A team led by T. Anuradha, District Designated Officer, Tamil Nadu Food Safety and Drug Administration Department, along with health officers N. Tirumoorthy, Balu, and others raided the godown at Shevapet and found the items kept for wholesale distribution. Officials said that the wholesale distributor was warned twice against selling the banned items. Goods valued at Rs. 6,000 were seized in an earlier raid.
But he continued to sell the items despite the warnings. It was found that the godown was a major point for distribution across the district. “Since he is a repeated offender, a report will be sent to the Commissioner of Food Safety for taking further course of action,” Ms. Anuradha told The Hindu .
“Legal action will be initiated against him after receiving the go-ahead,” she added. The seized items burned at the Erumapalayam compost yard.
Health officials said that the raids would continue and action would be taken against rule violators.

சேலத்தில் இயங்கும் "ஃபாஸ்ட்ஃபுட்' கடைகளில் சுகாதாரமில்லை: பண மழையில் நனையும் சுகாதாரத்துறை அதிகாரிகள்

சேலம்: சேலம் மாநகராட்சியில், ரோட்டோர இறைச்சி கடைகளை தொடர்ந்து, உடல் நலத்துக்கு, தீங்கு விளைவிக்க கூடிய வகையில், தயார் செய்து விற்பனை செய்யப்படும், "ஃபாஸ்ட் ஃபுட்' கடைகளுக்கு, அதிகாரிகள், செக் வைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.சேலம் மாநகராட்சியில், ஆடுகளை அறுக்க, வ.உ.சி., மார்க்கெட், மணியனூர் ஆகிய இடங்களில், இறைச்சி கூடாரங்கள் செயல்பட்டு வருகிறது. கறிக்கடை வியாபாரிகள், ஆடுகளை, இறைச்சி கூடாரங்களுக்கு அழைத்து வந்து, சுகாதாரத்துறை அதிகாரிகளின், அனுமதி பெற்று, அங்கேயே அறுத்து, கழிவுகளை அகற்றிவிட்டு, சுகாதாரமான முறையில், கறிகளை விற்பனை செய்ய வேண்டும்.
மாநகரில், இறைச்சி கடைகளின் எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரித்துள்ளது. இறைச்சி கடை நடத்தும் பலர், விதிமுறைக்கு புறம்பாக, ரோட்டிலேயே ஆடுகளை அறுத்து, சாக்கடை உள்ளிட்ட சுகாதாரசீர்கேடான இடங்களில், வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.சில்லி சிக்கன் என்ற பெயரில், தரமற்ற எண்ணெயில் பொரிக்கப்படும் சிக்கனை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள், "பண மழையில்' நனைவதால், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.சமீபத்தில், கறிக்கடைகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், அஸ்தம்பட்டியில் இருந்து ஐந்து ரோடு வரை, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த, 100 க்கும் மேற்பட்ட கடைகளை அப்புறப்படுத்தியது. அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டது."சுகாதாரமற்ற முறையில், தொடர்ந்து கறி விற்பனை செய்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.தற்போது, கறிக்கடைகளை காட்டிலும், "ஃபாஸ்ட் ஃபுட்' என்ற பெயரில், தரமற்ற வகையில் தயார் செய்யப்படும், கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஃபாஸ்ட்ஃபுட் கடைகளில், கோபி மஞ்சூரியன், சில்லி கோபி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் என்று பல்வேறு வகையான உணவு வகைகள் தயார் செய்யப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடிய, அனைத்து வகையான உபகரணங்களும், இதில், சேர்க்கப்படுகிறது.இதனால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மாநகரில், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் இதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.வணிக வளாகங்களில் மட்டும் செயல்பட்டு வந்த, "ஃபாஸ்ட் ஃபுட்' கடைகள், இன்று வீதிக்கு இரண்டாக முளைத்துள்ளது. முற்றிலும், சுகாதாரமற்ற முறையில், இயங்கி வரும் இவற்றையும், கறிக்கடைகளை அப்புறப்படுத்தியது போல, அகற்ற, சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி நல அலுவலர் (பொறுப்பு) மலர்விழி கூறியதாவது:சுகாதாரமற்ற முறையில், ஃபாஸ்ட் ஃபுட் விற்பனை செய்வது குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரி, அனுராதாவிடம் ஆலோசனை செய்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூரில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருள்கள் அழிப்பு

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பொருள்கள் அழிக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில், ரூ. 1.32 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களும், வலங்கைமான் பகுதியில் ரூ. 18,000 மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள கலப்பட டீ தூளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் திருவாரூர் நெய்விளக்குத் தோப்பு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு பள்ளத்தில் போட்டு மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன், புகையிலைப் பொருள்கள் அழிப்பு அலுவலர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல் தெரிவிக்கலாம்: பான் மசாலா, குட்கா பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கீழ்காணும் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
உணவுப் பாதுகாப்பு அலுவலகம் 0466-220034.
முத்துபேட்டை எஸ். அன்பழகன் 9443744811, கூத்தாநல்லூர், மன்னார்குடி கே. மணாழகன் 868980725, திருவாரூர் நகரம் எம். பால்சாமி 9894924690, திருவாரூர் வட்டம் எழில் சிக்காயராஜா 9865689838, மன்னார்குடி வட்டம் ரெங்கராஜன் 9361888388, குடவாசல் வட்டம் லோகநாதன் 9361984400, திருத்துறைப்பூண்டி வட்டம் விஜயகுமார் 9842307869,கோட்டூர் செல்வக்குமார் 9361444844, வலங்கைமான் எஸ். குருசாமி 9943331001, கொரடாச்சேரி, நீடாமங்கலம் செந்தில்குமார் 9788683354, நன்னிலம் லோகநாதன் 9842620977.

Consumerfed thattukadas to hit the streets soon


If you are a foodie, but wary of eating from thattukadas (roadside eateries on pushcarts) thanks to unhygienic environs and food safety concerns, then your wait should end in just over a month from now.
Consumerfed (Kerala State Co-operatives Consumers’ Federation Ltd.), the apex body of consumer co-operatives in the State, is all set to launch a chain of thattukadas under its brand name Triveni to provide quality food in a hygienic way.
“The first one will be launched at Gandhi Nagar in Kochi before Onam. If found successful, similar outlets will be opened gradually in all 140 Assembly constituencies in a year,” Consumerfed managing director Rigi G. Nair told The Hindu on Tuesday. The outlet at Gandhi Nagar will come up on the premises of Consumerfed’s head office.
Successful operation of Triveni Coffee Houses coupled with widespread food safety concerns prompted Consumerfed to launch the new initiative.
Triveni thattukadas aimed at reaching out to a larger customer base will have the traditional menu associated with other thattukadas in addition to light refreshments. Groceries for their preparation will be supplied from Consumerfed outlets.
Unlike conventional thattukadas that open in the evening and function late into the night, the Triveni outlets will operate from around 9.30 a.m. to 8.30 p.m. Besides they will be static units and not the usual pushcarts.
Consumerfed has already got a design of the outlet made in stainless steel by an Aroor-based factory approved. The structure will take up hardly 100 sq.ft. Solar panels will be installed on its roof to make it energy efficient.
“Setting up an outlet will cost about Rs. 5 lakh each. It will also provide employment to two persons. They are not being set up with profit motive but as a market intervention to serve quality food to the public. Since huge investments are not involved, we are sure that they will easily break-even,” Mr. Nair said.
Consumerfed is yet to reach a decision on who should be entrusted with the operation of its thattukadas. As a means of self- employment, it will most likely be outsourced to unemployed persons with reasonable know-how of cooking. Besides, direct operation of thattukadas is likely to create bureaucratic hassles, including in appointments. “Consumerfed will reserve the right to closely monitor the functioning of thattukadas. We will create a special wing with managers of each region being given charge to inspect their operations at least once in a month,” Mr. Nair said.

Mangoes destroyed

Three hundred kilograms of artificially ripened mangoes and 200 kg of rotten mangoes kept for preparing juice were seized and destroyed here on Tuesday.
M.Kavikumar, Designated Officer, District Food Safety Wing, said he and his team of officials, raided three godowns and found mangoes being artificially ripened with carbide stones.
They seized the fruits weighing 300 kg and destroyed them.

FSSAI is open to help industry, find solutions under FSSA: Chandramouli

The Food Safety and Standards Authority of India (FSSAI) is ready to help the industry and find solutions but of course under the ambit of the Food Safety and Standards Act asserted K Chandramouli, chairperson, FSSAI, at a seminar on Food Safety Regulations in India organised by PHD Chamber in the capital on Tuesday.
He added that a collaborative approach needed to be adopted for implementation of the Act. Implementation is a huge challenge and multi-sectoral synergies are needed to penetrate it to the smallest Food Business Operator (FBO).
He stated that FSSAI was trying to setup a system in order to improve the efficiency and get better implementation as per the Act.
He said, “With the passage of time, the regulation will keep on tightening which will include transportation, packaging, warehousing etc. He said that implementation has to be carried out with proper system in place and with the help of state government. He finally said that periodic meeting and interactions can be organised in order to improve the system.”
B N Dixit, director (legal metrology), ministry of consumer affairs, said that already they had amended the packaged commodity rules. The industry definitely needs to abide by them.
Sharad Jaipuria, senior VP, PHD Chamber, in his welcome address emphasised, “Despite producing and processing food, one of the prime responsibility that lies with the processors is to produce safe and healthy food. The policy-makers’ task is to make and implement laws and regulations that may enable production of safe food. Also with innovative products like nutraceuticals, functional foods etc., the regulations need to be in place.”
N M Kejriwal, chairman, agribusiness committee, PHD Chamber, during his theme presentation emphasised on the major problems that were being faced by the industry like licensing, labelling and product approval.

Tourism unit registration Act on the anvil

Dehradun, July 30
The Uttarakhand government is contemplating bringing a tourism unit registration Act, making registration compulsory for those engaged in the hospitality and tourism industry.
All those persons engaged in hospitality and tourism industry will have to provide information about their mode of operation.
The complete data base would help the Tourism Department determine the fares being charged by hoteliers and tour operators.
Besides, under the new Food Safety and Standards Act the food licence for restaurants and dhabas has to be procured from the state Food Safety and Standard Authority. “The Act is still being prepared and it will be first brought before the Cabinet and then tabled in the legislative Assembly,” said a senior official.