Jun 23, 2014

தேனீர் கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 23:
கரூரில் டீ விலை உயர்ந்தும் சுவையற்றதாக இருப்பதால் விலைக்கேற்ற டீ வழங்க வேண்டும்என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகராட்சி பகுதியான கரூர், தாந்தோணி, இனாம்கரூர், சணப்பிரட்டி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளான ஆண்டாங்கோயில் கிழக்கு மேற்கு, சணப்பிரட்டி, மேலப்பாளை யம், காதப்பாறை போன்ற பகுதிகளில் சுமார் 600 டீக்கடைகள் இயங்கி வரு கிறது. தொழில் நகரமான கரூரில் வேலைக்காக தினமும் 50ஆயிரம் தொழிலாளர்கள் வருகின்றனர். இவர்கள் தின்பண்டம் மற்றும் டீ, சாப்பிட டீக் கடை களையே நாடுகின்றனர்.
பல டீக்கடைகளில் கலப்பட டீத்துள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. டீத்துளில் புளியங்கொட்டை பவுடர், பாக்கு கொட்டைகளின் பவுடர்கள் கலக்கப்பட்டு பாக்கெட்டுகளாக வருகிறது. இதனால் வழக்கமான டீக்கும், கலப்படதூள் டீக்கும் உள்ள சுவையை எளிதாக தெரிந்து கொள்ளலாம் என டீ பிரியர்கள் தெரிவிக்கின்றனர். பிற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் குறிப்பாக நகர பகுதியில் விற்பனை செய்யப்படும் டீ சுவையில்லாமல் இருப்பதாக வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தமாக வருவோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கூலி வேலை செய்யும் ரகுமான் கூறுகையில், டீயை குடிக்கும் போதே ஒருவித சுவையின் மூலமாக இதனை உணர முடிகிறது. நாளுக்கு நாள் டீவிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. தற்போது ஒரு டீ ரூ.8ஆகி விட்டது. ஒருசில கடைகளில் 10க்கு விற்கப்படுகிறது. விலை உயர்த்தப்பட்டாலும் டீயில் சுவையில்லை. நல்ல டீ சாப்பிட வேண்டுமானால் ரூ.15 கொடுக்க வேண்டியதிருக்கிறது. தற்போது சப்ளை செய்யப்படுவது டஸ்ட் டீ தான். அதையும் இயற்கையான சுவையில் விநியோகிப்பதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு கலப்பட டீத்துளை கண்டுபிடித்து, தரமான டீத் துளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிற ஊர்களில் எல்லாம் நகராட்சி, மாநகராட்சி, சுகாதாரபிரிவு அதிகாரிகளும், உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரிகளும் டீத்துள் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கலப்பட டீத்துளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கையால் கரூரிலும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

FSSAI ADVISORY ON ISSUE OF LICENSING OF MILK & MILK PRODUCTS


சுகாதாரமற்ற முறையில் வெட்டப்பட்ட 810 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பெரம்பூர், ஜூன் 23:
சென்னையில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி, சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி கடைகள் செயல்படுவதாக, சுகாதார துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மாநகராட்சி மண்டல நல அலுவலர் டாக்டர் இளஞ்செழியன், கால்நடை மருத்துவர் கார்த்திக், துப்புரவு அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
4வது மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, சர்மா நகர், எம்கேபி நகர், வஉசி நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், நடத்திய சோதனையில், சுகாதாரமற்ற முறையில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 810 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அழித்தனர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், வட சென்னையில் ஆட்டு இறைச்சி வெட்டுவதற்கு வசதியாக, புளியந்தோப்பு பகுதியில் மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெட்டப்படும் ஆட்டு இறைச்சியில் மாநகராட்சி முத்திரையிடப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
ஆனால், பலர் மாநகராட்சி அனுமதியின்றி, ஆங்காங்கே கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்று வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. தற்போது, மேற்கொண்ட சோதனையில் தரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

காரைக்காலில் விதி மீறிய வியாபார நிறுவனங்களுக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

காரைக்கால், ஜூன்23:
காரைக்காலில் விதிகளை மீறும் வியாபார நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 படி, அனைத்து வணிகர்களும் வரும் ஆகஸ்ட்&4ம் தேதிக்குள், தங்கள் நிறுவன உரிமம் மற்றும் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்திற்கு புறம்பாக, காரைக்காலில் சில உணவு வியாபாரிகள் செயல்படுவதாக வந்த தொடர் புகாரையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் உத்தரவின் படி, புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் நேற்றுமுன்தினம் காரைக்காலில் உள்ள டீக்கடை, உணவகம், மளிகை மற்றும் டிபார்மெண்ட் ஸ்டோர்களில் திடீர் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது, உணவுப்பொருள்களின் தரம், கலப்படம், உணவு பொருளின் காலாவதி தேதி ஆகியவை சரிபார்க்கப்பட்டது. ஆய்வில், ஒரு சில நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது தெரியவந்ததையடுத்து, அந்நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டது. அதற்கு சரியான விளக்கம் தரவில்லையெனில் கடும் நடவடிகை எடுக்கப்படும் என புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

DINAMALAR NEWS



DINAMANI NEWS


DINAMALAR NEWS



Trade Leaders National Meet on 24 – 25 June at New Delhi

June 22, 2014 Ahead of presentation of Union Budget by the Central Government in the month of July, the Confederation of All India Traders (CAIT), apex body of the business community of the Country is holding a two days National Meet of the trade leaders from all over the Country on 24th & 25th June, 2014 at New Delhi. Shri Nitin Gadkari, Union Minister for Transport will be inaugurating the two days National meet on 24th June, 2014 at NDMC Convention Centre at New Delhi. The national meet is expected to be attended by more than 175 prominent trade leaders across the Country. The Two days national meet named as National Conference on Economic Issues is all set to discuss various core issues concerning retail trade and economy and the trade leaders will also decide their future strategy on all such issues.
CAIT National President Mr. B. C. Bhartia and Secretary General Mr. Praveen Khandelwal today said that the two daysnational conference will delibrate on various economic issues including FDI in multi brand retail, FDI in retail e commerce, Wholesale Cash & Carry format in retail trade being run by multinational companies, implementation of an early Goods & Services Tax (GST) regime, need of an alternate financial mechanism for small traders, Direct Tax Code, implications of various Free Trade Agreements (FTA) on domestic trade & commerce, formulation of a National Trade Policy for retail trade and a separate Ministry of Internal Trade, review of all Laws, Acts, Rules and Regulations governing internal trade of India, amendments in Companies Act, simplification and rationalization of tax structure and working of Commodity Exchanges in India.
The two days national meet will also discus review of Food Safety & Standards Act,2006 and its rules & regulations, role of trading community in urban development particularly in 100 smart cities declaration of the new Government, security of traders and commercial markets across the Country, review of working of Agriculture Produce Marketing Committee (APMC) Act and review of laws, rules & regulations governing trade & commerce in India.
Both Mr. Bhartia & Mr. Khandelwal also informed that beside trade leaders several retail trade and FTA experts,economists, financial analysts, banking experts, town planers and distinguished people from other sectors will also be attending the Conference in different business sessions during two days deliberations.