Sep 19, 2014

சேலம் அருகே 20 நாய்கள் சாகடிப்பு குடிநீரில் விஷம் கலந்து மக்களை கொல்வோம் பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம்


சேலம், செப். 19
சேலம் அருகே குடிநீரில் விஷம் கலந்து மக்களை சாகடிப்பதுடன், பெண் அதிகாரியின் தலையை துண்டித்து கொலை செய்வோம் என்று மிரட்டல் கடிதம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர் அனுராதா. இவருக்கு நேற்று மதியம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்த அனுராதா அதிர்ச்சி அடைந்தார். அதில், சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகரில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளோம். அதேபோல் 4வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து கொல்வோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா, உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால் ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் இந்த முகமது ரபீப் பற்றி தெரியும்.
கண்டிப்பாக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்க்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்து பார். எங்களுக்கு எதிரான எந்த இந்துக்கள் இருந்தாலும் அவர்களை உயிரோடு விடமாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுதப்பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால் 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்னையில் தலையிட்டால் உன் தலை இருக்காது. நீங்கள் நான் முடிவு செய்ய வேண்டும். இப்படிக்கு, முகமதுரபீப், கே.என்.பட்டி, சேலம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம், டாக்டர் அனுராதா தெரிவித்தார். பின்னர் கலெக்டரின் அறிவுரையின் பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட எஸ்பி சக்திவேல் ஆகியோரிடம் அனுராதா புகார் அளித்துள்ளார். மேலும் இந்த மிரட்டல் கடிதம், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கன்னங்குறிச்சி போலீசில் இன்று காலை புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், மிரட்டல் கடிதம் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஜீவா நகர் 4வது வார்டு பகுதியில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் இன்று விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 நாட்களில் 20 நாய்கள் விஷத்தால் இறந்திருப்பது உறுதியானது. இந்த மிரட்டல் கடிதம் பற்றி கேள்விபட்ட பொதுமக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அந்த குடிநீர் தொட்டி பகுதியில் இன்று திரண்டனர். அவர்கள் கூறுகையில், மிரட்டல் கடிதத்தில் கூறி இருப்பது போல் எங்கள் பகுதியில் நாய்களை கொன்றுள்ளனர். அடுத்தடுத்து நாய்கள் இறந்ததால் நாய்களை வீட்டில் கட்டி வைத்துள்ளோம். தற்போது மக்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டி இருப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதனிடையே பஞ்சாயத்து 4வது வார்டு கவுன்சிலர் கேசவன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் குடிநீர்த்தொட்டியில் ஏறி தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடிநீர்த்தொட்டிகளில் ஊராட்சி காவலாளிகளை பணியமர்த்தி கண்காணிப்பதுடன், பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளோம் என பஞ்சாயத்து தலைவர் பாபு கூறினார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து பொது மக்களை கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம்






கோரிமேடு, செப். 19–
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக டாக்டர் அனுராதா உள்ளார். இவர் பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தி கலப்பட பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்களை கண்டுபிடித்து அழித்தார்.
வெல்லத்தில் கலப்படம் செய்வதை கண்டுபிடித்தார். சேகோ ஆலைகளுக்கு ரசாயனம் தடவிய ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை தடுத்தார். இப்படி பரபரப்பான நடவடிக்கைகளை எடுக்கும் அவருக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. முகமது ரபீக் என்பவர் எழுதி அனுப்பியதாக கூறப்பட்ட அந்த தபால் கார்டில் எழுதப்பட்டு இருப்பதாவது:–
சேலம் மாவட்டம் கொண்டப்ப நாயக்கன்பட்டியில் ஜீவா நகரில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதே போல் 4–வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்வோம்.
இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். ‘அனுராதா உன் னால் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால் ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும். இந்த முகமது ரபீக் பற்றி கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கண்டிப்பாக கலக்கப்படும்.
உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக எந்த இந்துக்கள் இருந்தாலும் அவர்களை உயிருடன் விடமாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும்.
கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால் 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன் தலை இருக்காது. நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இப்படிக்கு முகமது ரபீக் கே.என்.பட்டி சேலம்–8 என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து கலெக்டர் மகரபூஷ ணத்துக்கு டாக்டர் அனுராதா தகவல் தெரிவித்தார்.
இந்த கடிதம் குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆகியோரிடமும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா புகார் செய்து உள்ளார்.
மேலும் கொண்டப்பநாயக்கன்பட்டி சிற்றூராட்சி தலைவர் ஆர்.பி. பாபு இந்த மிரட்டல் கடிதம் குறித்து கன்னங் குறிச்சி போலீசில் புகார் செய்து உள்ளார்.
அந்த புகார் மனுவில் கடிதம் எழுதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. போலீசார் அந்த மர்ம கடிதம் குறித்து விசாரித்து வருகிறார்கள். கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்ட சிப்ஸ் நிறுவனத்துக்கு சீல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


மொடக்குறிச்சி, செப். 19:
மொடக்குறிச்சி அருகே அனுமதியின்றியும் சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்ட சிப்ஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முள்ளாம்பரப்பு அசோகபுரத்தில் தனியார் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதாரமற்ற முறையிலும் அனுமதியின்றியும் சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டுவருவதாக ஈரோடு உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கருணாநிதிக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அதிகாரி டாக்டர் கருணாநிதி தலைமையில் அலுவலர்கள் எட்டிக்கண், கதிர்வேல், மணி, முருகேசன், சென்னியப்பன், ராமசாமி ஆகியோர் நேற்று அந்த குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையில் அனுமதியின்றி அந்த நிறுவனம் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு சுகாதாரமற்ற முறையில் மரவள்ளி சிப்ஸ் தயாரிப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள சிப்ஸ், ஒரு டன் குச்சி கிழங்கு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த சிப்ஸ் நிறுவன குடோனுக்கு சீல் அமைத்தனர்.
உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி கருணாநிதி கூறுகையில், அனுமதியின்றி சிப்ஸ் தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வந்துள்ளது. பறிமுதல் செய்த சிப்ஸ் வகைகைள கோவை உணவு பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறப்படும். ஆய்வு முடிவு கிடைக்க 15 நாட்கள் ஆகும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாமக்கல் அருகே சேகோ ஆலையில் இறக்கிய ஸ்டார்ச் மாவில் கலப்படமா?


சேந்தமங்கலம், செப்.19&
நாமக்கல் தாலுக்கா செல்லப்பம்பட்டியை தலைமையிடமாக கொண்டு சுமார் 40க்கும் மேற்பட்ட சேகோ தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகோ தொழிற்சாலையில் மக்கா சோளம், மரவள்ளி கிழங்குகளை அரைத்து ரசாயன கலப்படம் செய்யாமல் சுத்தமான முறையில் ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு செல்லப்பம்பட்டி, நாமகிரிபேட்டை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கலப்படம் இன்றி ஜவ்வரிசி தயாரிப்பதை கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து செல்லப்பம்பட்டியில் நேற்று நள்ளிரவில் 2 சேகோ தொழிற்சாலைகளில் கலப்படம் செய்யப்பட்ட ஸ்டார்ச் மாவு ஆத்தூரில் இருந்து 2 லாரிகள் மூலம் சேகோ ஆலைக்கு கொண்டு வரப்பட்டதாக தமிழ்நாடு விவசாய சங்கத்திற்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த விவசாய சங்கதினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு அங்கு விரைந்து வந்து லாரிகளை சுற்றி வளைத்தனர். பின்னர் இதுகுறித்து நாமக்கல் ஆர்டிஓ காளிமுத்து, தாசில்தார் சுகுமார், நாமக்கல் தாலுக்கா ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத்தினர், மற்றும் நள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து லாரிகளில் கொண்டுவரப்பட்ட ஸ்டார்ச் மாவு சுத்தமானதா அல்லது கலப்படமானதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாதிரி மாவை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நள்ளிரவில் சேகோ ஆலையில் விசாரணை நடந்ததில் சேகோ உற்பத்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெல்லத்தில் கலப்படம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை பாயும் உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி

பரமத்திவேலூர், செப்.19:
வெல்லத்தில் கலப்படம் செய்தால் கடுமையான குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மா வட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகள், வெல்ல உற்பத்தியாளர்கள், வெல்லமண்டி கடைக்காரர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களை உணவு பாதுகாப்பு துறை யினர் ஆய்வு செய்ய மா வட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவு படி மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவசண்முகம், சிவநேசன், இளங்கோவன், பாலு மற்றும் முத்துசாமி ஆகியோர் கபிலர்மலை மற்றும் பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகள், தனியார் தயாரி ப்பு கூடங்களில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, வெல்லத்தை வெண்மையாக்கும் பொ ருட்டு வெல்லப்பாகு கொதி நிலையில் வரும் போது சர்க்கரை (ஆஸ்கா) கலந்துள்ளதா என ஆய்வு செய் தனர். ஆய்வு மாதிரி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் வெல்லத்தில் எவ்வித கலப்படம் செய்யக்கூடாது, வெல்லத்தை வெல்ல மண்டிக் கடைக்காரர்களோ அல்லது வியாபாரிகளோ அல்லது வெல்ல வியாபாரிகளோ வாங்கி விற்பனை செய்யக்கூடாது என ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வெல்லத்தில் கலப்படம் செய்தால், அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொறையாரில் சோதனை கடைகளில் பான்பராக், புகையிலை பறிமுதல்



தரங்கம்பாடி, செப். 19:
பொறையாரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தவபாலன், சேகர், சதீஷ், செந்தில்குமார், பிரவீன் ஆகியோர் கொண்ட குழுவினர் தரங்கம்பாடி பொறையார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களும், காலாவதியான ஊறுகாய், அப்பளம், குளிர்பானம், ரொட்டிகள் போன்ற பொருட்களும் விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டுபிடித்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.25ஆயிரம்.
இதுகுறித்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், பொதுமக்கள், உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவைகளை வாங்கும் போது தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதி, தயாரிப்பு நிறுவன முகவரி உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

விதிமுறைகளை மீறும் கடைக்காரர்கள் அனுமதியில்லாமல் ஆட்டிறைச்சி விற்பனை

 
காரைக்குடி, செப். 19:
காரைக்குடி, சங்கராபுரம் பகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வெளியிடங்களில் ஆடுகள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி நகர் பகுதியில் 200க்கும் மேற்ப ட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு தினமும் 200க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறன. வார விடுமுறை மற்றும் திருவிழா நேரங்களில் 300 முதல் 500 ஆடுகள் வெட்டப்படும். ஆடுகளை, நகராட்சி, ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆடுவதை செய்யும் கூடத்தில் தான் வெட்ட வேண்டும். இதற்காக கழனிவாசல் பகுதியில் நகராட்சி சார்பில் நவீன ஆடு வதைசெய்யும் கூடம் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆட்டிற்கு நோய் எதுவும் உள்ளதா என கால்நடைமருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின்னர் வதை செய்யப்பட்டு சீல் வைத்து விற்பனைக்கு அனுப்பப்படும்.
ஆனால் இந்த நடைமுறையை எந்த கடைக்காரர்களும் கடைபிடிப்பது இல்லை. இதனால் பெயர் அளவில் ஒரு ஆட்டை மட்டும் வெட்டி அதற்கு சீல் வைத்து விட்டு, அதற்கு மேல் வெட்டப்படும் ஆடுகளை கடைக்காரர்களே வெட்டி விற்பனை செய்கின்றனர். ஒரு சில கடைகளில் பல்வேறு இடங்களில் திருடி கொண்டுவரும் ஆடுகளை வெட்டி விற்பதாகவும் தெரிகிறது.
தவிர சாலை விபத்து மற்றும் நோய் காரணமாக இறந்த ஆடுகளையும் கடைக்காரர்கள் வெட்டி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆடுகளுக்கு நோய் ஏதேனும் இருந்தால் அது மனிதர்களும் பரவ வாய்ப்புள்ளது.
இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ஆடுவதை செய்யும் இடத்தில் ஆட்டினை வெட்ட குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இதனை வதைசெய்யும் இடத்தை ஒப்பந்தம் எடுத்தவர்கள் கடைகளுக்கு நேரடியாக சென்று வசூல் செய்துவிடுகின்றனர். இதனால் யாரும் வதைசெய்யும் இடத்திற்கு வராமல் கடைகளிலேயே வெட்டி விற்பனை செய்கின்றனர். இதனை முறைபடுத்த உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

உணவுப்பொருள்கள் கலப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா புதிய சட்டம்?


மதுரை: உணவுப்பொருள்களில் கலப்படம் செய்வோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் மத்திய அரசின் புதிய சட்டம் இல்லை. எனவே பழைய சட்டத்தையே சிறிது காலம் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டவிதிகளை மாற்ற வேண்டும் என உணவுப்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவில் கலப்படம் என்பது இப்போது பெரும் பிரச்னை. 1960ல், முதலாவது உணவுபொருள் கலப்பட தடைசட்டத்தின் திருத்தம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டது. என்றாலும் 60 ஆண்டுகாலமாக உணவில் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்நிலையில், 5.8.2011ல் 'உணவுப்பொருள் கலப்படத்தடைச் சட்டம்' முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, 'உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டப்படி, நுகர்வோர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் தாங்களே விதிகளை பின்பற்றும் முறைக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதனால் 'கலப்படம்' என்ற சொல் இச்சட்டத்தில் நீக்கப்பட்டு, தரம் குறைவானது, பாதுகாப்பற்றது என்ற வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன,உணவுப்பாதுகாப்பு மற்றும் நிர்ணயச்சட்டம் 2006 ன் கீழ், 'தரம் குறைவானது' என்பது சட்டத்தில் குறிப்பிட்டுள்ள தரக்குறியீட்டிற்கு குறைவான உணவுப்பொருள்'. 'பாதுகாப்பற்றது' என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்றும், ''தடுப்புக்குறியீடு' என்பது விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது உணவுப்பொருளின் பாக்கெட்டின் மீது தவறான, ஏமாற்றக்கூடிய வாசகங்கள் இருப்பது, ஒரு உணவுப்பொருளை மற்றொரு உணவுப்பொருளாக விற்பது என வரையறுக்கப்பட்டுள்ளது.
அபராதம் என்ன?
தரம் குறைந்த பொருளை விற்பதற்கு, அதிகபட்சமாக ஐந்து லட்ச ரூபாயும், 'தப்புக்குறியீடு' செய்யப்பட்ட உணவுப்பொருளை விற்பதற்கு அதிகபட்சமாக மூன்று லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது.இதன்படி ஒரு உணவுப்பொருள் 'நல்லெண்ணெய்' என விற்பனை செய்யப்படுகிறது. அதை ஆய்வு செய்ததில், பாமாயில் கலந்துள்ளது தெரிந்தது. ஆய்வின் முடிவு 'தரம் குறைந்தது'ஆகும். அது நல்லெண்ணெய்யே அல்ல, முழுக்க பாமாயில் எனத் தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவு 'தப்புக்குறியீடு' ஆகும்.இந்த அனைத்து உதாரணங்களும், சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள 'பாதுகாப்பற்ற உணவு' என்ற வரையறைக்குள் வராது. இக்குற்றங்களுக்கு டி.ஆர்.ஓ., கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்குகளில் சிக்கும் உணவுப்பொருள் கையாளுபவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல், தங்கள் வக்கீல் மூலமாக வழக்கை நடத்தலாம் என புதிய சட்டத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டு காலத்தில், டி.ஆர்.ஓ., கோர்ட்டுகள் இவ்வழக்குகளில் ரூ.10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை தான் அபராதம் விதித்துள்ளன. பழைய சட்டத்தில் கடும் தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 'உணவுப்பொருள் கலப்படத்தடைச்சட்டம்-1954 ன் படி கலப்பட குற்றத்திற்கு 3 மாத சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் கலப்பட குற்ற வழக்குகள் குற்றவியல் கோர்ட்டில் நடத்தப்படும். தவறு செய்தவர்கள் குறைந்தது 3 முறையாவது கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.ஒரு உணவுப்பொருள் 'தரம் குறைந்தது' என்றால் இயற்கை காரணங்களால் தர நிர்ணயத்திற்கு குறைவானது என கொள்ளலாம். அதாவது, துவரம்பருப்பில் வண்டு துளைத்த பருப்பு கலந்திருப்பது, முதிர்ச்சியடையாத பருப்புகள் இருத்தல், அயோடின் கலந்த உப்பில் அயோடின் அளவு சற்று குறைவாக இருத்தல், பேரீச்சம் பழத்தில் உடைந்த பழங்கள் அதிகம் இருத்தல் ஆகியவை. இந்த மூன்றிலும் இயற்கையாகவே தரம் குறைந்துள்ளதால் 'தரம் குறைவானது' என வரையறை செய்யலாம்.
ஆதாய கலப்படம் ஆனால் தண்ணீர் கலந்ததால் கொழுப்புச்சத்து குறைவான பால், அரிசி மாவில் மஞ்சள்தூள் கலப்பு, பாமாயில் கலந்த நல்லெண்ணைய், ஆவார இலை கலந்த டீத்தூள், எளிதில் ஆவியாகாத வாசனைத்திரவியங்கள் நீக்கப்பட்ட கிராம்பு ஆகிய கலப்படங்கள், ஆதாயத்திற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டவை. இவற்றையும் 'தரம் குறைவானது' என புதிய சட்டம் வரையறை செய்கிறது.புதிய சட்டம் உணவுப்பொருட்களில் இயற்கையாக ஏற்படும் தரக்குறைவையும், ஆதாயத்திற்காக செய்யப்படும் கலப்படங்களையும் வேறுபடுத்த தவறிவிட்டது.
உணவுப்பொருளை கையாளுபவர்கள் (உற்பத்தி, வணிகம் செய்வோர்) தாங்களே முன்வந்து சட்டவிதிகளை பின்பற்றி, நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவுப்பொருள் வழங்குவர் என்ற எண்ணத்தில், கொண்டு வந்த மிருதுவான புதிய சட்டம் உணவுப்பொருள் கலப்படத்தை முற்றிலும் நீக்கி விடுமா? என்றால் கடந்த 3 ஆண்டுகால அனுபவத்தில் 'இல்லை' என்றே உணவுத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'கடுமையானது' என கருதப்பட்ட உணவுப்பொருள் கலப்படத்தடைச்சட்டம்-1954 கலப்படத்தை முற்றிலும் தடுக்கவில்லை. ஆனால் புதிய சட்டத்தில் சில விதிகளுக்கு பின் ஒளிந்து கொண்டு நுகர்வோரை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் கலப்படகாரர்களை தண்டிக்க போதிய கடுமை இல்லை.
எனவே உணவுப்பொருள் கலப்படத்தை தடுக்கும் விதமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் அல்லது பழைய சட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
உணவுப்பொருட்களை கையாளும் அனைவரும் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய சட்டம் அமலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் பலர் லைசன்சே பெறவில்லை. 4.2.2015 வரை லைசன்ஸ் பெற காலக்கெடு பெற்றுள்ளனர். லைசன்ஸ் பெறவே இத்தனை இழுத்தடிப்பு என்றால் கலப்படம் செய்வோரை தண்டிக்க கடும் நடவடிக்கை இல்லை என்றால் நுகர்வோர் நிலை எதிர்காலத்தில் என்னாவது?

Students fall sick after having hostel food

TRICHY: As many as 20 nursing students of the K A P Viswantham Government Medical College (KAPVGMC), Trichy who were suffering from diarrhoea due to food poisoning for the past two days were admitted to an exclusive ward in Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH).
The students staying in the hostel inside MGMGH premises had fallen sick on Tuesday allegedly after consuming food provided there. The affected students were given treatment in the hospital on Wednesday but did not recover fully. Hence, they were admitted to the nursing students ward in the hospital where they were being treated till Thursday. As on Thursday, six severely-affected students were hospitalized while the rest of them remained in the hostel with medication.
When TOI spoke to some of the students, they were reluctant to open up about the reason for the outbreak fearing consequences from the college administration.
A student on condition of anonymity said, "The students were affected by vomiting and diarrhoea from Tuesday after consuming food provided in the hostel. Very few students only got admitted after they were severely affected.
But some of them did not want to get admitted so they are taking rest in the hostel." More than 500 nursing students are staying in the hostel.
The health wing of the Trichy Corporation took food samples from the hostel and sent it for testing. The students were provided corporation supplied drinking water.
"The drinking water should be checked at the end point periodically by the hospital itself. If it was due to water contamination, it would have affected a lot of patients. Hence, we suspect food contamination could be the reason. Anyway, we have taken the water sample," Dr S Mariappan, city health officer told TOI.
The food safety officer (FSO) of food safety wing also inspected the hostel but they could not take the food sample. "There was no food establishment there to take them for sample. So, we are waiting to check where there will be any further history of the disease. If not, there will be no need for taking food samples. The food contractor of the hospital has applied for the renewal of the food safety licence," Dr A Ramakrishan, designated officer, food safety wing said.
Meanwhile, the college faculty refused to comment on the matter as the principal was unavailable.

Milk samples fail test, water used for adulteration

Amritsar, September 18
The testing of milk in certain areas of the city by the Dairy Development Department has highlighted the fact that water was being used for adulteration. The seizures of synthetic milk products in the past indicate usage of more contaminants.
The Dairy Development Department had released figures of the milk tests conducted by it during the last two days. According to the department, of the total 52 samples tested, only 17 were found unadulterated and fit for consumption.
The 35 samples, which were found adulterated, contained water. The department had claimed that the 35 milk samples had water from 5 per cent to 50 per cent.
Earlier this year, the Health Department had seized 7 quintal synthetic khoya. Sources in the dairy business said synthetic khoya and milk were being sold with impunity.
“When a person sells a kilo of paneer for Rs 100 to 120, one should easily get suspicious that pure cheese cannot be produced at that cost,” said a shopkeeper.
Although the Dairy Development Department has now found that around 66 per cent samples were adulterated with water, yet it does not have any powers to take action against milk suppliers.
Deputy director, Dairy Development Department, Kashmir Singh, said, “We do not have statuary powers to punish. Our drives are basically for creating awareness among consumers.” Kashmir said the department would organise 60 camps where mobile milk testing van would be available. Besides the consumers could bring their samples to the dairy development office for testing, he added.
He said milk suppliers were cheating customers by supplying them milk mixed with water and charging for superior quality fresh milk. At present the residents procure fresh milk from vendors at a Rs 35 to 40 per litre.

FOOD SAFETY AND STANDARDS ACT Health Dept to serve notices on violators

Amritsar, September 18
The District Health Department is all set to initiate action against owners of shops selling food items in the city, who have not registered or obtained licences under the Food Safety and Standards Act so far.
In a meeting with officials of the Health Department from all the districts, the Health Minister had given instructions to take action against all such shops, which did not possess a licence.
District health officer, Dr Shivkaran Singh Kahlon said, “The last date for obtaining licences or
registration passed in August. The Health Minister has given instructions for taking action against defaulters.”
He said food inspectors while inspecting food businesses would ask for registration certificate or licence as applicable from owners. On failing to show registration or licence a show cause notice would be issued by the Health Department, he added.
“Businessmen who are selling eatables and have not obtained licenses or registration certificates shall be deemed to carrying on an illegal trade and will invite action,” said Kahlon.
According to the Food Safety and Standards Act, a food business with a annual turnover of less than Rs 12 lakh is required to get registration from the Health Department. A food business with an annual turnover exceeding Rs 12 lakh is required to obtain a licence.
The registration and licence is mandatory for all food businesses, which involves processing, manufacturing, packaging, catering or transportation at any stage. According to the figures available with the department, around 15,000 food businesses have either registered or obtained licences.
Dr Kahlon said there were reasons to believe that a large number of businesses had not yet registered or obtained licences. He said the Food Safety and Standards Act covered all consumable sellers, including chemists and liquor shops. Even the government institutions and warehouses had obtained licences, added Dr Kahlon.

SMART FOOD LABLES

Are you the type to smell the milk just to make sure it hasn’t expired before you chug it straight from the carton? Etiquette failures aside, there’s some good news for you, buddy. A new smart food labelingsystem could save you that smell test.
Engineers at the University of Alberta are fine-tuning a new type of smart label that will change colors to notify you if the food has gone bad. As a consumer, you won’t notice a difference in the packaging as it will look virtually the same. However, the main upgrade will be that the label will change from blue to white or cloudy if the food is filled with bacteria.
There’s a number of reasons it could go bad ranging from previous contamination, like a spread of Salmonella, to the food simply expiring. At the same time, expiry dates aren’t always accurate as eggs tend to last much longer than the label indicates while other foods can become bacteria beds long before the expiry date -- especially if not properly stored.
The challenge for most of us is that with certain foods it’s hard to tell if they’ve become infested with bacteria. Sometimes there will be a clear discoloration or a noticeably pungent smell, but some food items don’t give us the signs. And then there’s the fact that we’re just hungry and don’t want to waste money or time, so we’ll try to push the boundaries of expirations since it’s right in front of us to eat. In any case, this would be a huge help when fridge surfing, and if you’re a single male bachelor this could single-handedly save you upset stomach and food poisoning at least a couple of times a year.
While the researchers are first focusing on food safety in terms of expiry and contamination, it’s only a matter of time before smart food labeling expands to other realms. There’s a big push to get better labeling on grocery store products -- especially in the United States with GMO’s -- and while we hear lots about smarter labeling, it’s often this type of “smart” that we’re referring to.
This is just the start, but there are smart labels in the works that involve technology where you can scan with your phone to get ingredients and quickly understand what they are. We’ve seen some apps pop up to try and help the consumer out, such as GoodGuide. They provide a different type of safety with reviews on what’s really inside the product and whether it’s detrimental to your health. Consumers are becoming hungrier for transparency from food corporations, so that we know exactly what we’re getting when we’re shopping -- especially as the gluten-free and GMO-avoiding crowds continue to include greater numbers.
This is a three-year project that in its second year, but the results are fairly positive so far. One of the last steps is to make this affordable enough so that food corporations get on board. It’s not expected to be a huge hurdle not just because they want to please the consumer. They’re interested because they’ll be able to save money in terms of food recalls by catching the problem early.