Jul 4, 2015

எது நல்ல தேன்?

ஆன்ட்டிபயாட்டிக் இல்லாத தேன் வகையைத் திட்டவட்டமாகக் கண்டறிவது கடினம்தான். அதேநேரம் பசுமை அங்காடிகளில் கிடைக்கும், செயற்கை பதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாத தேன் வகைகளை வாங்குவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
கலப்படமில்லாத நல்ல தேனைத் தேர்ந்தெடுப்பது எப்படி என ஆலோசனை தருகிறார் வேளாண்-உணவு நிபுணர் பாமயன்:

தேனின் தரத்தைக் கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை: ஒரு பிளாட்டிங் பேப்பரில் இரண்டு துளி தேனை விட்டுப் பார்ப்பது. தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக் காகிதத்திலும் தேனை விட்டுப் பார்க்கலாம். அப்படிச் செய்யும்போது தேன் அப்படியே இருந்தால் நல்ல தேன், காகிதத்தால் உறிஞ்சப்பட்டால் கலப்படத் தேன்.
அதேபோலக் கண்ணாடிக் குவளை ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேனை மேலிருந்து ஊற்றினால், அது ஒரு கம்பியைப் போலக் கீழே இறங்கி அடிப்பகுதியைத் தொட வேண்டும். மாறாக, இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது கலப்படத் தேன்.
தேனில் மூன்று வகைகள் உள்ளன: முதலாவது கொம்புத் தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்தத் தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும். இதற்கு மருத்துவ மதிப்பு குறைவு. இரண்டாவது பொந்துத் தேன். குகை, மரப்பொந்து போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள்.
இந்தத் தேன் வகை மிதமான அளவு கிடைக்கும். மருத்துவ மதிப்பும் மிதமான அளவு உண்டு. மூன்றாவதாகக் கொசுத் தேன் என்ற சிறிய தேனீ வகை உண்டு. இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.
தேனை எப்படி எடுத்தாலும், அதில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இதற்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஆனால், அப்படி இயற்கையாகப் பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும் என்பதால், தேனைச் சூடுபடுத்தி விடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தேனின் இயல்புத்தன்மை மாறிவிடுகிறது.
அது மட்டுமல்லாமல் தேனைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் தேனைப் பதனப்படுத்தி விடுகிறார்கள் (pasteurisation). இந்தச் செயல்முறையில் தேனின் இயற்கையான சத்துகள் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. வணிகரீதியான தேனை வாங்கும்போது, இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு- 4: கசக்கத் தொடங்கிய மருந்து


தேசிய அளவில் விற்பனையாகும் வணிகரீதியான தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் அதிக அளவில் இருப்பதைச் சி.எஸ்.இ. (அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) நடத்திய ஆய்வு ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியது. அதற்குப் பிறகுதான் வணிகரீதியான தேனில் ஆன்ட்டிபயாட்டிக் கலந்திருக்கக்கூடாது என்பது தொடர்பான விதிமுறையை உருவாக்கும் நடவடிக்கையில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கவனம் செலுத்த ஆரம்பித்தது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாவது 12 நிறுவனங்களுடைய தேன். இதில் 10 உள்நாட்டு நிறுவனங்கள், 2 இறக்குமதி செய்யப்படுபவை. இந்தியாவில் வணிகரீதியில் அதிகம் விற்பனையாகும் தேன் வகை, டாபர் ஹனி. வைத்தியநாத் ஆயுர்வேதப் பவன் நிறுவனத்தின் வைத்தியநாத் காட்டுப்பூ தேன் அதற்கு அடுத்ததாக அதிகம் விற்பனை ஆகிறது. ஹிமாலயா காட்டுத் தேன், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் பதஞ்சலி தூய்மைத் தேன் போன்றவை இவற்றுக்குப் பிறகு வருகின்றன. அத்துடன் காதி, மெசன்ஸ், கோல்டு, உமாங், ஹிம்ஃபுளோரா கோல்ட், ஹிட்கரி போன்ற நிறுவனங்களின் தேனும் சந்தையில் கிடைக்கின்றன.
இவற்றைத் தவிர ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகும் காப்பிலானோ நிறுவனத்தின் தேனும், ஸ்விட்சர்லாந்தின் நாரிம்பெக்ஸ் ஏ.ஜி. நிறுவனத்தின் தேனும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அது வேற, இது வேற
இந்த நிறுவனங்களின் தேன் மாதிரியைச் சி.எஸ்.இ. ஆய்வகம் 2010-ம் ஆண்டில் பரிசோதித்துப் பார்த்தபோது, 12 நிறுவனங்களின் தேன் மாதிரியில் 11-ல் பல்வேறு ஆன்ட்டிபயாட்டிக்குகள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் தேன் நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதித் தரத்துக்கும் இல்லை. இதிலிருந்து உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் தேனுக்குத் தனித் தரக்கட்டுப்பாட்டையும், ஏற்றுமதி செய்யப்படும் தேனுக்குத் தனித் தரக்கட்டுப்பாட்டையும் மேற்கண்ட நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இயற்கை தேன் உற்பத்தியாளர் ஒருவரிடம் இது தொடர்பாகப் பேசியபோது, 'தேனுக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நம் நாட்டு நிறுவனங்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை. ஏற்றுமதி செய்வதற்கு முன் குறிப்பிட்ட சரக்குத் தொகுதியில் இருந்து எடுக்கப்படும் தேன் மாதிரிகள், ஏற்றுமதி கண்காணிப்பு மன்றத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது அப்போது கண்டறியப்பட்டால், அந்தச் சரக்குத் தொகுதிக்கு உடனடியாகச் சீல் வைக்கப்படும். அதேநேரம், சம்பந்தப்பட்ட தேனுக்கு அக்மார்க் முத்திரையைப் பெற்றிருந்தால், அந்த உற்பத்தியாளர் சரக்கை மீட்டெடுத்து உள்நாட்டில் விற்பனை செய்ய முடியும். ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கொண்ட தேனை உள்நாட்டில் விற்பனை செய்யத் தடை இல்லை என்பதுதான் இன்றைய நிதர்சன நிலை' என்று குறிப்பிட்டார்.
அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட தேன் பாட்டில்கள் சிறந்தவை என்று நம்ப வேண்டாம். ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேனிலும், ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்பட்ட நாடுகளின் தரக் கட்டுப்பாட்டை மீறியதாகவே இருக்கின்றன.
ஒன்றுக்கும் மேலே
தேசிய அளவில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாபர், வைத்தியநாத் ஆகிய இரண்டு நிறுவனங்களின் தேனிலும் குறைந்தபட்சமாக 2 ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்ததாக அதிகம் விற்பனையாகும் தேன் வகைகளில் குறைந்தபட்சமாக 3 ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருந்ததைச் சி.எஸ்.இ. நடத்திய பரிசோதனை உறுதி செய்கிறது.
இந்தத் தேன் பாட்டில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்ட்டிபயாட்டிக்குகள் இருப்பதற்குக் காரணம், வெவ்வேறு இடங்களில் பெட்டியில் வளர்க்கப் பட்ட தேனீக்களின் கூட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட தேனின் கலவையாக அவை இருக்கலாம் என்பதுதான். ஒவ்வொரு இடத்திலும் தேனீ வளர்ப்பில் வித்தியாச வித்தியாசமான ஆன்ட்டி பயாட்டிக்குகள் கொடுக்கப்பட்டி ருக்கலாம் அல்லது தேனில் கலக்கப்பட்டி ருக்கலாம். எனவே, வணிகரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் ஒரே இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதில்லை என்பது தெளிவாகிறது.
விற்பனையாகும் பெரும்பாலான வணிக ரீதியிலான தேன் பாட்டில்களில் இமயமலை அடிவாரத்தில் உள்ள செழிப்பான காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டது என்றோ, சுந்தரவனக் காடுகளில் சேகரிக்கப்பட்டது என்றோ அச்சிடப்பட்டிருக்கும். பல நிறுவனங்கள் காஷ்மீர் தேன் என்றும் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், அதெல்லாம் வெறும் விளம்பரம் மட்டுமே, உண்மையில்லை என்று சுட்டிக்காட்டுகிறது சி.எஸ்.இ. ஆய்வு முடிவு.
என்னென்ன ஆன்ட்டிபயாட்டிக்?
தேனீ வளர்ப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆன்ட்டிபயாட்டிக்குளாக சி.எஸ்.இ. ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டுவது: Oxytetracycline (தேனீக்களில் பாக்டீரியத் தொற்றைத் தடுக்க), Chloramphenicol (பல நாடுகளில் கால்நடை வளர்ப்பில் தடை செய்யப்பட்டது), Ampicillin (கால்நடை மருந்து, அதேநேரம் தேனீக்களுக்குப் பரிந்துரைக்கக்கூடாது), Enrofloxacin (மாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது, இப்போது தேனீக்களுக்கும் தரப்பட்டுவருகிறது), Ciprofloxacin (கோழி வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது), Erythromycin (கோழி வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது, தற்போது தேனீக்களுக்கும் தரப்படுகிறது).
பெரும்பாலான தேன் வகைகளில் ஆக்சிடெட்ராசைக்கிளின் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 2 தேன் வகைகளில் ஆக்சிடெட்ராசைக்கிளின் 10 மடங்குக்கு மேலும், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட குளோரம்ஃபீனிகால் 12 மடங்குக்கு மேலும் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
குழந்தைகள் ஜாக்கிரதை
தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதால் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தான் பிரச்சினை அதிகம். ஏனென்றால், இவர்களுக்குத்தான் வைரல் தொற்றுகள் பெரும்பாலும் ஏற்படும். அதற்குச் சிகிச்சையாக ஆன்ட்டிபயாட்டிக் கொடுக்க வேண்டி வரும். அப்போது உடலில் தொற்றிய நுண்ணுயிர்களை ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் அழிக்கின்றன.
அதேநேரம் ஆன்ட்டிபயாட்டிக் கலந்த தேனை ஒருவர் தொடர்ந்து உட்கொண்டுவந்திருந்தால், நோய் வந்த நேரத்தில் தரப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து உரிய முறையில் செயலாற்றாது. ஏற்கெனவே உடலில் சேர்ந்துவிட்ட ஆன்ட்டிபயாட்டிக்குகளால், உடலுக்குள் புகுந்த உடனேயே நுண்ணுயிர்கள் அதிக எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுகின்றன. அதற்குப் பிறகு சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை ஒருவர் உட்கொள்ளும் போது, அதிக எதிர்ப்புசக்தி கொண்ட நுண்ணுயிர்கள் மட்டுப்பட மறுக்கின்றன. இதுவே Antibiotic Resistance அல்லது கிருமிகள் பெறும் எதிர்ப்பு சக்தி. இந்தப் பிரச்சினை தேசிய அளவிலும் மாநில அளவிலும் தீவிரமடைந்துவருகிறது.
அது மட்டுமல்லாமல் உடலில் அதிகப்படியாகச் சேரும் ஆன்ட்டிபயாட்டிக் ரத்தம் தொடர்பான நோய்களையும், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, பல் போன்றவற்றில் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
சட்டம் தடுக்கவில்லை
சி.எஸ்.இ.யின் ஆய்வுக்குப் பிறகு தேனில் ஆன்ட்டிபயாட்டிக்கோ, பூச்சிக்கொல்லிகளோ இருக்கக்கூடாது என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அறிவித்தது. தேனில் ஆன்ட்டிபயாட்டிக்குகளை தடை செய்யும் கோடெக்ஸ், அமெரிக்க எப்.டி.ஏ., ஐரோப்பிய யூனியன் தரக்கட்டுப்பாடுகள் நம் நாட்டுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்தது.
தேன் உற்பத்தியின் எந்தக் கட்டத்திலும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஜூன் 2012-ல் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தடை விதித்தது. தேனில் ஆன்ட்டிபயாட்டிக் கலந்திருப்பதைத் தடுப்பது தொடர்பான வரைவு விதிமுறைகளைக் கடந்த டிசம்பர் 2014-ல் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. வரையறுத்துள்ளது. ஆனால், இது இன்னமும் அரசாணையாக வெளியிடப்படவில்லை.
தடுப்பதற்கான நிரந்தர வழி
ஆன்ட்டிபயாட்டிக் மாசுபாடு நம் உடலைத் தாக்காமல் இருக்க வேண்டுமானால் தேனீ, ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றின் வளர்ச்சியை அதிகரிக்க ஆன்ட்டிபயாட்டிக் மருந்தைப் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்கப்பட வேண்டும். கால்நடைகளுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு மட்டும் ஆன்ட்டிபயாட்டிக் பயன்படுத்த விலக்கு அளித்து, மற்ற அனைத்து வகைகளிலும் அதன் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சைக்காக ஒரு கால்நடைக்கு ஆன்ட்டிபயாட்டிக் கொடுக்கப் படும்போது, அதை வெளிப்படையாக அறிவிக்கும் முத்திரையுடன் விற்பனை செய்ய வேண்டும். அல்லது அவற்றை உணவுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் மட்டுமே ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாட்டை, நமது உணவுச் சங்கிலியில் இருந்து முற்றிலும் தடுக்கும்.

மேகியில் மட்டும்தான் விஷமா....மற்றதெல்லாம் அமுதமா?

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டு, விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதை கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில் விற்பனை செய்துவந்த ஒருசில பெரு நிறுவன அங்காடிகள் தாமாகவே முன்வந்து, அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அரசுகள் அளவிலான உத்தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனினும், 'வாய்மொழி உத்தரவுகள்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. 
மேகியில் கன உலோகங்களும் மற்ற நச்சுப் பொருட்களும் அனுமதிக் கப்பட்ட அளவினை விட அதிகம் இருந்ததா இல்லையா என்ற விவாதத் திற்குள் நான் போக விரும்பவில்லை. இந்த விவகாரத்தால் விளைந்த நன்மை என்று பார்க்கையில், மக்கள் 'பாதுகாப்பான உணவுகளை'ப் பற்றி ‘பேச’ ஆரம்பித்துள் ளனர். படிக்காதவர்கள் கூட, பைகளில் அடைக்கப் பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பற்றிப் பேசுகின்றனர். 
ஆனால், எனது வினாக்கள், "இப்போது அனைத்தும் சரியாகிவிட்டதா? இனி நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அத்தனையும் சத்துக்கள் மட்டுமே நிறைந்த, நச்சுக் கலக்காத பண்டங்களாகி விட்டனவா?" என்பவையே! ஏனென்றால், நாம் விஷங்கள் தோய்ந்த உணவை உண்ண ஆரம்பித்து ஆண்டுகள் பலவாய் நீண்டு விட்டன! இன்றைக்கு ஒரு நூடுல்ஸ் வகையைத் தடை செய்ய முனைப்பு காட்டிய ஆட்சியாளர் களும், அதிகாரிகள் வர்க்கமும் இந்த பிரச்சினையை அறிந்தும் அறியாமல் இருக்கின்றனர் என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், அரசுகளின் திட்டங்கள் சிலவும் இந்த உணவுகள் நஞ்சாவதை ஊக்குவிக்கின்றன என்றே சொல்லலாம். அது எப்படி?
கீரை வகைகள் பல்வேறு சத்துக்களைக் கொண்டவை என்று எல்லா தரப்பினராலும் விரும்பி உண்ணப் படும் ஒரு காய்கறி. ஆனால், இந்தக் கீரைகளின் உற்பத்தி எப்படி, எங்கு நடக்கின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரும்பாலும் கீரைகள் நகர்ப்புறங்களுக்கு மிக அருகாமையில் உள்ள நிலங்களி லேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனெனில் கீரைகள் அறுவடை செய்த சில மணி நேரங்களிலேயே வதங்கிவிடும் என்பதால், உடனடி விற்பனை என்பது மிக அத்தியாவசியமானது.

நகர்ப்புறங்களில் மங்காத தேவையும், குன்றாத விற்பனையும் இருக்கின்ற காரணத்தால் கீரைகள் நகரங் களுக்கு அருகில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களுக்கு அருகினில் விளைவிக்கப்படும் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளில் கன உலோகங்கள் அதிகம் இருப்பதாகப் பல்வேறு பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
உதாரணத்திற்கு, சற்றொப்ப ஒரு மாமாங்கத்திற்கு முன்னர், தில்லிக்கு மிக அருகில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்ப்போம். இந்த ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு, தில்லிக்கு வெளியில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் ஐந்து முக்கிய இடங்களில், வெண்டை, காலிஃப்ளவர் மற்றும் பசலைக் கீரை ஆகிய மூன்று முக்கியமான காய்கறிகளின் மாதிரிகளைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் சேகரித்து, அவற்றில் காரீயம், தாமிரம், துத்தநாகம், மற்றும் நீலீயம் (காட்மியம்) ஆகிய கன உலோகங்களின் அளவினை கணக்கிட்டது. அவற்றுள் 72 விழுக்காடு பசலைக்கீரை மாதிரிகளில் காரீயத்தின் அளவு, இந்திய உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு கிலோவிற்கு இரண்டரை மில்லிகிராம் என்ற அளவினை மிகுந்திருந்தது. 
இந்த இடத்தில் இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள காரீயத் தின் அளவானது, சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட அளவான கிலோவிற்கு 0.3 மி.கி. உடன் ஒப்பிட் டால், சற்றொப்ப ஏழு மடங்கு அதிகமாகும். அப்படிப் பார்த்தால் அனைத்து பசலைக்கீரை மாதிரிகளிலுமே அனுமதிக்கப்பட்ட அளவினைவிட காரீயம் மிகுந்திருப்பது தெளிவாகின்றது.


நீலீயத்தின் அளவு, இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே (1.5 மி.கி/கிகி) இருப்பினும், ஐரோப் பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுடன் (0.2 மி.கி/கிகி) ஒப்பிடுகையில், சற்றொப்ப எழுபது விழுக் காடு பசலைக்கீரை மாதிரிகளில் நீலீயத்தின் அளவும் அதிகமே! இந்த ஆய்வின் முடிவு, ஒருபானை சோற் றுக்குப் பதம் பார்க்க எடுக்கப்பட்ட ஒரு பருக்கை மட்டுமே! அதற்குப் பின்னர் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ இது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. 
இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்; இந்த கன உலோகங்கள் பிரச்சினை ஏதோ இந்தியாவில் மட்டுமே இருப்பதன்று. பல வளரும் நாடுகளிலும் (உ-ம்: இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்சானியா) உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் கன உலோகங்களின் கலப்பு உள்ளது. 
விவசாய பொருட்களின் உற்பத்தியில் இன்னோர் அரக்கன் - பூச்சிக்கொல்லிகள்! காய்கறிப் பயிர்கள் பலவற்றின் உற்பத்தியிலும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மிக அதிகம்! உதாரணத்திற்கு, தொண்ணூறு களின் இறுதியில் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்க்கலாம். கர்நாடகம் தக்காளி அதிகம் பயிரிடும் மாநிலங்களில் ஒன்று. தக்காளியில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்க ஒருசில விவசாயிகள் ஐம்பது முறைகூட பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதாக அந்த ஆய்வு கூறுகின்றது. 

நாங்கள் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கர்நாடகம், குஜராத் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங் களில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் பயிரிடும் விவசாயிகளிடம் நடத்திய ஓர் ஆய்வில், அவர்கள் எக்டருக்குப் பதினொன்று முதல் இருபத்து மூன்று கிலோ பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது தெரியவந்தது. அப்படியானால் இந்தப் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு எந்தளவிற்கு, விற்பனைக்கு வரும் காய்கறி களில் நிலைத்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிலவும் பிரச்சினை அல்ல... வங்கதேசத்தில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு 180 முறை, அதாவது தினந்தோறும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் கொடுமை நடந்திருக்கின்றது. 
பிலிப்பைன்ஸில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு, சுமார் 41 லிட்டர் பூச்சிக்கொல்லிகளைக் கூட தெளித்துள் ளனர். ஆக பெரும்பாலான நாடுகளில் மக்கள் விஷம் தோய்ந்த உணவுப் பண்டங்களைத்தான் உட்கொள் கின்றனர்.
இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத நச்சுக்களை யார் கண்டுபிடிப்பது? எந்த அரசு அமைப்பாவது தொடர்ந்த இடைவெளிகளில் காய்கறி மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்கின்றதா? ஏதோ அங்கொன்றும் இங் கொன்றுமாக நடக்கும் ஆய்வுகளே அவற்றை வெளியுலகத்திற்குக் காட்டுகின்றன. ஆனால் பெரும்பாலான அரசுகள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அதைவிட கொடுமை, வேளாண் இடுபொருட்களான வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அரசுகளே கூட வழங்குகின்றன. 
நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய சம்மந்தப்பட்ட துறைகள் எந்த முன்னெடுப்பையாவது மேற்கொண்டுள்ளனவா? “வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் குறிப்பிட்ட அளவிற்குத்தான் பயன்படுத்த வேண்டும்; இந்தளவிற்கு மேல் பயன்படுத்தினால் பலன் ஏதும் கிட்டப் போவதில்லை; மாறாக பணவிரயத்துடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், நாம் உண்ணும் உணவும் நஞ்சாகும்” என்பதனை என் றைக்காவது, முறையாக விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்களா?


இன்றைய சூழலில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப உணவுப் பண்டங்களை விளைவிக்கும் சூழலில் விவசாயிகள் உள்ளனர். அதனால், அதிக விளைச்சலே அவர்களது நோக்கம். கொஞ்சம் கூட, தங்களது விளைபொருட்களை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதால் இழக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவேதான் அதிகளவில் வேதி இடுபொருட்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசும், வேளாண் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் என்ன செய்திருக்க வேண்டும்? வேதி இடுபொருட்களுக்கு மாற்றான இயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், பூச்சி விரட்டிகளையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்திருக்க வேண்டாமா? 
சுமார் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே இதுபோன்ற சில ஆராய்ச்சிகள் மட்டுமே முன்னெடுக்கப் பட்டன. ஒருசில நல்ல உயிரியல் பூச்சிக்கொல்லிகளும், இனக்கவர்ச்சிப் பொறிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை முறையாக வணிகப்படுத்தப்படவில்லை. ஆராய்ச்சிகளில் விளையும் பொருட்கள், ஆய்வுக்கூடங்களை விட்டு வெளியேறி, சந்தைக்கு வந்தால் ஒழிய அந்த கண்டுபிடிப்புகளின் நோக்கம் முற்றுப் பெறுவதில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், வேளாண்துறை, கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவதில் பின்தங்கியே உள்ளது. இதற்கு அரசுகளும் ஒரு காரணம். 
இதுபோன்ற சுற்றுச் சூழலுக்கேற்ற, விடமற்ற உணவுப்பொருட்களை விளைவிக்க ஏதுவான கண்டுபிடிப்பு களைச் சந்தைக்குக் கொண்டுவர இசைவான கொள்கைமுடிவுகளை எடுக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட நாட்டமுள்ள நிறுவனங்களுக்கு உரிய உதவிகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். இயற்கைக்கு ஒத்திசைவான இடுபொருட்களை மானியவிலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு நடக்குமானால், படிப்படியாக சில ஆண்டுகளிலேயே இதுபோன்ற இடுபொருட்கள் சந்தையில் சகஜமாக புழக்கத்திற்கு வந்துவிடும்.


விவசாயிகளும் அவற்றை அதிகளவில் பயன்படுத்துவர். அதைவிடுத்து, அதுபோன்ற ஆராய்ச்சிகளும் அதிகம் நடக்காமல், அதுபோன்ற இடுபொருட்களும் சந்தையில் அதிகளவில் இல்லாதபோது, விவசாயி களிடம் சென்று, வேதி இடுபொருட்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னால், அவர்கள் எப்படி காதுகொடுத்து கேட்பர்? ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் வேளாண் தொழிலில் அவர்களும் கொஞ்சமேனும் இலாபம் ஈட்டத்தானே முயலுவார்கள்? இருப்பினும், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயிகள் இயற்கைக்கு இசைவான இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்ய முனைகின்றனர். 
ஆனால் இந்த முன்னெடுப்புகள் பல்கிப் பெருக வேண்டுமானால், அரசும், வேளாண் பல்கலையும், வேளாண் துறையும் அதிக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, கன உலோகங்கள் கலந்த எத்தனையோ பொருட்கள் இன்று மனித வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன. 
அவற்றின் கழிவுகள் மண்ணி லும், நீரிலும்தான் நிறைகின்றன. அதுபோன்ற நிலத்தில் விளையும் பொருட்களிலும், அது போன்ற நீரி னைப் பயன்படுத்தி உருவாகும் பொருட்களிலும், கன உலோகங்களின் கலப்பு அதிகமாகத்தான் இருக்கும். எனவே மேலை நாடுகளில் இருப்பதைப் போன்று, கழிவுகள் மேலாண்மை முறையாகச் செய்யப்படாதவரை, இந்த பிரச்சினைகள் எழுவது தவிர்க்க இயலாததே!
இறுதியாக, நுகர்வோர்களும் விழிப்புடன் இருத்தல் அவசியம். ஏதோ சமைத்தோம், எதையோ சாப்பிட் டோம் என்றில்லாமல், உணவுப்பண்டங் களைத் தெரிவு செய்து வாங்குவதில் தொடங்கி சமைத்து உண்பது வரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நுகர்வோர் கொடுக்கும் அழுத்தம், விவசாய உற்பத்தியாளர்களைச் சரியான உற்பத்தி முறை களைப் பின்பற்றச் செய்யும். இந்த உற்பத்தி மற்றும் நுகர்வுச் சங்கிலியில், தனியார்துறை என்னும் கண்ணியின் பங்கெடுப்பும் இருக்குமானால், நலம் மிகு உணவுப்பண்டங்களின் உற்பத்தியும், நுகர்வும் எளிதில் சாத்தியமாகும். 
ஆக, ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளைச் செய்யாவிட்டால், நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பல வற்றிலும் தேவையற்ற நச்சுப் பொருட்களின் கலப்பு இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஏதோ ஒரு நூடுல் ஸை மட்டும் தடை செய்துவிட்டு, இனியெல்லாம் நமக்கு நலம்தான் என்றிருந்தால், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலத்தான்!

Clip of Kid chewing Tobacco Sets off alaram Bells!

CHENNAI: An NGO working in the field of tobacco control received a disturbing video clipshowing a kid, only around two years or so, consuming a banned tobacco product with ‘expertise’, even as an older person’s voice is heard in the background, giving him directions.
The Tamil Nadu People’s Forum for Tobacco Control (TNPFTC) received the video complaint through its ‘tobacco monitor mobile application’ on July 1.
The 27-second video shows a man handing over ‘Hans’, a brand of chewing tobacco that contains nicotine, to a little boy.
Video grab of a child consuming a tobacco product with ‘expertise’ in Tamil Nadu | express
The kid grabs the packet happily, puts the product on his left palm, and rubs it like an expert, while the male voice in Tamil gives him directions.
Then, the kid gathers the product with his tiny fingers and stuffs it between his lower lip and gums, all by himself.
The male voice cheers him for his ‘expertise’.
The way the boy goes about doing it gives the viewer a feeling that the child had been doing it for some time.
The TNPFTC forwarded the complaint copy to the Chairperson, Food Safety and Standards Authority of India, Director of National Tobacco Control Programme, Union Ministry of Health and Family Welfare, State health secretary, State Tobacco Control Cell, Directorate of Public Health and Preventive Medicine and the Director General of Police, on July 2.
“We are planning to forward to the complaint to the cyber crime cell, because we don’t know the origin of this video or its authencity. We got this complaint from a ‘student from Chennai’, who too wasn’t sure of its origin. We first need to trace this child and help him out of such a dangerous atmosphere,” TNPFTC national convenor S Cyril Alexander told Express on Friday.
It may be noted that the Tamil Nadu Commissioner of Food Safety and Drug Administration, through a notification dated May 23, 2015, has extended prohibition of manufacture, storage, distribution or sale of gutka and pan masala and any other food product containing tobacco or nicotine as its ingreidents, in the whole State of Tamil Nadu for a further period of one year.

Fear of inspectors eating up food industry




It has become a bit like the inspector raj of yore. Government assessors walk up to restaurants, groceries, sidewalk cafes, and randomly pick up samples of packaged water, coffee, noodles, sandwiches – as a matter of fact, any packaged or unpackaged edibles – for testing, and leave the owners or managers of the outlets quaking in their shoes.
NEW DELHI: It has become a bit like the inspector raj of yore. Government assessors walk up to restaurants, groceries, sidewalk cafes, and randomly pick up samples of packaged water, coffee, noodles, sandwiches as a matter of fact, any packaged or unpackaged edibles for testing, and leave the owners or managers of the outlets quaking in their shoes.
In the weeks since the Maggi noodles ban, followed by the withdrawal early this week of Japanese noodle maker Indo Nissin's Top Ramen by the central regulator FSSAI, food companies have hit the panic button. It would seem a bout of indigestion has struck the country's $250 billion (approx Rs 1.5 lakh crore) food industry and it's not a happy situation.
This is how it goes: State food regulators pick up random samples and get them tested either in their own laboratories or any Food Safety and Standards Authority of India (FSSAI)-mandated lab. They report their finding to FSSAI.
State regulators can take action on them. They can impose fines and seize. At the national level, FSSAI has the mandate to ban, recall or impose a penalty something it appears to be doing with gladiatorial truculence. It is reportedly sitting on numerous product approval requests, from Tata Starbucks to Kellogg's and McCain, on the ground that these are either unsafe or wrongly labelled.
Underscoring the alarm is an apparent lack of clarity on the objectives of the administrative drive, although there's no gainsaying that one of the end results is that the food industry has pulled itself up by the bootstraps and started putting its products through more rigorous checks.
Ramesh Chauhan, chairman of Bisleri International, put it in perspective, "Some are raising genuine issues, which is good. But some are taking advantage of the business environment."
Praveen Khandelwal, national secretary general of CAIT (Confederation of All India Traders), said, "There's a lot of anxiety and confusion among shopkeepers across the country. We're scared to stock goods. There's no clarity on what FSSAI wants. Sometimes they say retailers will be held responsible, sometimes they say manufacturers. There should be a clear directive."
Large food companies have started taking defensive measures. Kolkata-based ITC, for instance, rushed to remove the "no added MSG" disclaimer from packs of its Sunfeast Yippee noodles and followed it up by creating a media hotline for journalists, who now have immediate access to a senior spokesperson from its foods division.
The consequence of the ban on Maggi in Gujarat has been that it has empowered dubious NGOs to "blackmail" the food industry. "There have been instances of NGOs randomly turning up at restaurants to check food for lead content so that they can blackmail food companies," an industry expert said.
In Chennai, food safety officials say they've collected more than 20 samples from fast food majors like KFC, Dominos, McDonalds, Pizza Hut, Marrybrown and Venkys Chicken in the last few weeks, after allegations of substandard food being served at their outlets.
Chennai officials said the food safety department has found one of the three surveillance samples lifted from a KFC outlet substandard. "We've collected legal samples from the same outlet and sent it to King Institute, Guindy to prove the authenticity of the result. We will take action against the outlet if the legal sample results show signs of substandard quality," said a food safety official.
Packaged food manufacturers are nervous. "No one has complete clarity on the food safety act and neither do we have the infrastructure to implement it," said M Krishnan of Chennai's Sree Krishna Sweets and Snacks. "They want us to take responsibility for something that might enter my product from the soil or the raw material. But, we do not have enough food laboratories to check our raw material for banned substances on an everyday basis," he said.
Bengaluru's Jacob Kurian, a partner in private equity firm New Silk Route Advisors (NSR) and CEO of fast food chain Vasudev Adigas, laments the country's lack of infrastructure to handle all the testing, certification and inspections.
"The government seems to be going after packaged food mostly. For those importing ingredients for their products, their products are stuck at ports and airports as these agencies aren't letting them import. Everybody who has packaging and labelling requirements is affected. Everything is stuck in Delhi and there's no clarity about this impasse," Kurian said.
In Mumbai, Prakash Shetty of Lalit Bar and Lunch Home, said, "We never serve Maggi but the ban has meant there is no major demand for Chinese food."
Ahar, an association of over 8,000 bars and restaurants in Mumbai, said, "The Maggi ban has made consumers more cautious and selective about their food choices and are more inclined towards costly but healthy dishes,"
In Chandigarh, Food and Drugs Administration commissioner S Narayan said, "Usually, the department collects 200-300 samples every month but we had a target of 1,000 samples in June." He added that 200 out of 1,000 product samples ranging from packaged food to drinking water have been found sub-par.
An FDA official, KK Sharma, said the intention isn't to create panic, but to ensure that all safety criteria are met. "It appears shopkeepers and packaged food companies have become more alert about quality control," Sharma told TOI.
In Ranchi frequent visits by food safety officers to retail outlets and restaurants are keeping owners and managers on their toes. A recent raid on Big Bazaar by food inspector KP Singh found three samples of packaged food and spices not standing up to scrutiny.
Singh said, "Chicken Miracle Masala and Paneer Miracle Masala of a Gujarat-based company were found substandard while, hakka noodles was found misbranded. Notices were sent to manufacturers of these products as well as to Big Bazaar." He added, "We're not visiting MNC food chains as they usually maintain quality."
Since June 12, raids and random sampling of packaged products in Bhopal by FSSAI officials has sent panic-stricken food chains scrambling for cover. Shantanu Roy, a manager at Amer Palace, said, "Food department raids and sampling has impacted our business. Now hoteliers are on their toes and taking extra care on food served."
Odisha has reported a staggering 80-90% drop in sale of instant food. Rabindra Dash, owner of one of the state's largest grocery chain, said consumers are rejecting instant food products which comprise 50% of products in stores. "The huge dip in sales has hit our business very hard," Dash added.

FSSAI fast-tracks application process

NEW DELHI: Amid panic in the $250 billion domestic food industry after the Maggi recall, the Food Safety and Standards Authority of India (FSSAI) has fast-tracked the processing of applications, for either approval or rejection. 
Contrary to food industry players' claim about high number of pending approvals, data released by the regulator shows number of pending cases has come down from over 3,000 in August last year to 1,058 by June-end. 
The regulator has uploaded the status of the applications as on June 30, in a move to counter the charges of private players. It covers both applications received under manual and online mode. "We are trying our level best to process the applications fast. The products are approved or have been referred to scientific panels, closed or rejected as soon as it is possible," said a top functionary in FSSAI. 
Soon after the NDA government had come to power, many industry players had lodged complaints with the Prime Minister's office, alleging that the regulator was sitting on applications for long. 
Sources said the pending cases had piled up between May and August 2014 because of an order of Mumbai High Court. However, the order was vacated by the Supreme Court in August.