Sep 2, 2016

காரிமங்கலம் அருகே போதை பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

காரிமங்கலம்,
காரிமங்கலம் அருகே போதை பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.
போதை நெடி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் வெங்கட். இவருக்கு சொந்தமாக காரிமங்கலம் அடுத்த கேத்தனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் 6 ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீப்பெட்டி தொழிற்சாலை அமைப்பதாக கூறி கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஆண்களோ, பெண்களோ யாரும் வேலைக்கு செல்லவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்த போது பீகார் மாநிலத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் அந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் போதை நெடி வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், கலெக்டர் விவேகானந்தன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பாக்கு தொழிற்சாலை
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காலை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிருந்தா மற்றும் அலுவலர்கள், காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன் தலைமையிலான போலீசார், அதிரடிப்படை போலீசார் அந்த தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த தொழிற்சாலையில் போதை பாக்கு தயாரிப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன் ஆகியோர் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரவு நேரங்களில் போதை பாக்கு தயாரிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 5 டன் எடையுள்ள போதை பாக்குகள் மற்றும் போதை பொருட்கள் தயாரிக்க தேவையாக ஒரு டன் புகையிலை தனித்தனி அறைகளில் வைத்து இருப்பது தெரியவந்தது.
பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து தொழிற்சாலையில் தயாரித்து விற்பனைக்காக வைத்து இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் போதை பாக்கு, போதை பாக்கு தயாரிக்க பயன்படும் 1 டன் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொழிற்சாலையில் இருந்த ஒரு வேன், 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதை பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிருந்தா காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ்–இன்ஸ்பெக்டர் கனகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் போதை பாக்கு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாந்தோப்பில் ரகசிய பான் தொழிற்சாலை..! திடுக் ஆய்வு

தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள முதலைப்பட்டி எனும் கிராமத்தில் மாந்தோப்பிற்குள் ரகசியமாக செயல்பட்டுவந்த பான், குட்கா தொழிற்சாலையை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.
முதலைப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பான் மற்றும் குட்கா பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரகசியமாக செயல்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும்படி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தாவுக்கு கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் மருத்துவர் பிருந்தா, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கோபிநாத், நாகராஜ், குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதலைப்பட்டி கிராமத்திற்கு விரைந்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்த அங்கு ரகசிய ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பான் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், பான் பொருட்கள் உற்பத்திக்கும், பேக்கிங் பணிக்கும் பயன்படுத்தி வந்த இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ரகசியமாக மாந்தோப்பில் செயல்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அதிகாரி பிருந்தாவிடம் பேசினோம்" கடந்த ஒரு மாத காலமாகத்தான் இந்த ஆலை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எந்தவிதமான உரிமமும் பெறவில்லை. இந்த ஆலையின் உரிமையாளர் யார் என்ற விபரமும் தெரியவில்லை. நாங்கள் ஆய்வுக்கு சென்றபோது அங்கு பீகார் தொழிலாளர்கள்தான் இருந்தார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

குட்கா தொழிற்சாலைக்கு 'சீல்': ரூ.50 லட்சம் மதிப்பு பொருட்கள் பறிமுதல்

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே முதலிப்பட்டியில், அனுமதியின்றி செயல்பட்டு வந்த குட்கா தொழிற்சாலைக்கு, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சீல் வைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த முதலிப்பட்டியில், ஒரு மாந்தோப்பு அருகே, தடை செய்யப்பட்ட குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தாவுக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், நாகராஜன், குமார் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்று அவர் சோதனை நடத்தினார். இதில், எம்.வி.எம்., என்ற பெயரில் குட்கா தயாரித்து, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும், இங்கு தயாரிக்கப்பட்ட குட்கா பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வில் நிக்கோடின் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தால், இதன் உரிமையாளர் மீது, போலீசில் புகார் செய்யப்படும் என்றனர். சீல் வைக்கப்பட்டுள்ள குட்கா ஆலை, அனுமதியின்றி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்தி மாந்தோப்பில் குட்கா, பான்மசாலா தொழிற்சாலை நடத்திய கும்பல்

செப்.2:
தர் ம புரி மாவட் டம் காரி மங் க லம் அருகே மாந் தோப் பில் வட மாநில தொழி லா ளர் களை கொண்டு ரக சி ய மாக செயல் பட்ட குட்கா, பான் ம சாலா தயா ரிக் கும் குடோ னுக்கு உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று `சீல்’ வைத் த னர். அங் கி ருந்த ₹80 லட் சம் மதிப் பி லான பான் ம சாலா பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
தர் ம புரி மாவட் டம் காரி மங் க லத் தில் இருந்து பாலக் கோடு செல் லும் மெயின் ரோட் டில் முத லிப் பட்டி கிரா மத் தில் மாந் தோப் பில் தடை செய் யப் பட்ட பான் ம சாலா மற் றும் குட்கா தயா ரிக் கும் நிறு வ னம் ரக சி ய மாக செயல் பட்டு வரு வ தாக எஸ்.பி. பண்டி கங் கா த ருக்கு தக வல் கிடைத்து. தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் பிருந்தா தலை மை யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் நாக ரா ஜன், கோபி நாத், கும ணன் ஆகி யோர் அடங் கிய குழு வி ன ரும், காரி மங் க லம் போலீ சா ரும் முத லிப் பட்டி சென் ற னர். அங்கு ஒரு மாந் தோப் பிற் குள் சோதனை நடத் தி ய தில் ஒரு குடோ னில் பான் மசாலா, குட்கா பொருட் கள் தயா ரிப் பில் 20க்கும் மேற் பட் டோர் ஈடு பட் டி ருந் த னர். வர் களை, அதி கா ரி கள் சுற் றி வ ளைத் த னர். விசா ர ணை யில் அனை வ ரும் பீகார் உள் ளிட்ட வட மாநி லங் க ளைச் சேர்ந் த வர் கள் என் ப தும், ஒப் பந்த அடிப் ப டை யில் பணி யாற்றி வரு வ தும் தெரிய வந் தது. உரி மை யா ளர் குறித்து கேட் ட போது, அவர் யார்? என்றே தெரி யாது என இந் தி யில் கூறி னர். அதி கா ரி கள் வரு வது பற்றி அறிந் த தும் அவர் தப்பி ஓடி யது தெரிய வந் தது.
இதை ய டுத்து, அங்கு விற் ப னைக்கு அனுப்ப தயா ராக வைத் தி ருந்த குட்கா மற் றும் பான் ம சாலா பொருட் கள், 5 பேக் கிங் செய் யும் மெஷின் கள், பிளாஸ் டிக் பக் கெட் டு கள், கவர் கள், வறுக் கப் பட்ட தேங் காய் சீவல் கள் உள் ளிட்ட 6 டன் எடை யுள்ள பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும், பொருட் களை எற் றிச் செல் வ தற் காக தயார் நிலை யில் நிறுத்தி வைத் தி ருந்த 3 வாக னங் க ளும் கைப் பற் றப் பட் டது. இதன் மதிப்பு சுமார் ₹80 லட் சம் இருக் கும். இதை ய டுத்து, அங்கு வேலை செய்து கொண் டி ருந்த வட மா நில தொழி லா ளர் கள் போலீஸ் பாது காப் பு டன் வெளி யேற் றப் பட் ட னர். பின் னர், குடோனை பூட்டி `சீல்’ வைத் த னர். தர் ம புரி மாவட் டத் தில் முதன் முறை யாக தடை செய் யப் பட்ட பான் ம சாலா தயா ரிக் கும் நிறு வ னத் திற்கு `சீல்’ வைத்த சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது. இது தொ டர் பாக தப் பி யோ டிய பான் ம சாலா குடோன் உரி மை யா ளரை காரி மங் க லம் போலீ சார் தேடி வரு கின் ற னர்.

DINAMANI NEWS


உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ரெய்டு பழநியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பழநி, செப்.2:
பழநி நக ரக் கடை க ளில் உண வுப் பொ ருள் பாது காப்பு அதி கா ரி கள் நடத் திய ரெய் டில் 6 கிலோ புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
தமி ழ கத் தில் குட்கா மற் றம் பான் ம சாலா பொருட் க ளின் விற் பனை தடை செய் யப் பட் டுள் ளது. தடை உத் த ரவு அம லில் இருந் தும் கடை க ளில் இத் த கைய பொருட் க ளின் விற் பனை தடை யின்றி நடந்து வரு கி றது. வழக் க மாக விற் பனை செய் யும் விலை யை விட 2 மடங்கு அதிக விலைக்கு இப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. பழ நி யில் உள்ள பெரும் பா லான கடை க ளில் குட்கா மற் றும் பான் ம சா லாக் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. பழநி நக ரில் முரு கன் கோயில் இருப் ப தால், இங்கு நாள் தோ றும் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் வந்து செல் கின் ற னர்.
பான் மசா லாக் கள் மற் றும் குட் காக் கள் பயன் ப டுத் தும் மக் கள் அதன் எச் சில் களை சாலை க ளி லேயே உமிழ் கின் ற னர். பழநி அடி வா ரம் பகு தி யில் மலைக் கோ யில் செல் லும் பக் தர் கள் செருப்பு அணி யா மல் வெறும் காலில் தான் நடந்து செல் வது வழக் கம். பான் மாச லாக் க ளின் எச் சில் களை காலில் மிதிக் கும் சூழல் ஏற் ப டு கி றது. இத னால், தடை செய் யப் பட்ட பான் மசா லாப் பொருட் க ளின் விற் ப னை யைத் தடுக்க வேண் டு மென பக் தர் க ளும், பொது மக் க ளும் கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில், பழநி உண வுப் பொ ருள் பாது காப்பு அலு வ லர் மோக ன ரங் கம் தலை மை யி லான அலு வ லர் கள் கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இதில் 3 கிலோ புகை யிலை வகை க ளும், 2 கிலோ குட்கா வகை க ளும் பறி மு தல் செய் யப் பட் டன. இது கு றித்து பழநி உணவு பாது காப்பு அதி காரி மோக ன ரங் கத் தி டம் கூறு கை யில்,
“பழ நி யில் உள்ள 70க்கும் மேற் பட்ட கடை க ளில் சோதனை நடத் தப் பட் டன. இதில் 4 கிலோ புகை யி லைப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டுள் ளன. சுமார் 18க்கும் மேற் பட்ட கடைக் கா ரர் க ளுக்கு நோட் டீஸ் கொடுக் கப் பட் டுள் ளது. தடை செய்ய பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வது கண் டு பி டிக் கப் பட் டால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். தவிர, குட்கா மற் றும் பான் ம சா லாக் கள் பயன் ப டுத் து வ தால் ஏற் ப டும் நோய் பாதிப் பு கள் குறித்து பொது மக் க ளி ட மும், கடைக் கா ரர் க ளி ட மும் விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தப் பட்டு வரு கி றது. அது போல் கூடு தல் விலைக் குப் பொருட் கள் விற் பனை செய் வது, சுகா தா ர மில் லாத உண வுப் பொருட் கள் விற் பனை செய் வது, விலைப் பட் டி யல் வைக் காத உண வுக் க டை கள் மீதும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்” என் றார்.

வணிகப்பிரிவு அதிகாரிகள் அதிரடி ரயில் நிலையத்தில் உணவு பண்டங்களின் தரம் ஆய்வு

வேலூர்,செப்.2:
காட் பாடி ரயில் நிலை யத் தில் விற் பனை செய் யப் ப டும் உணவு பண் டங் க ளின் தரத்தை வணி கப் பி ரிவு அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண் ட னர்.
காட் பாடி ரயில் நிலைய உண வ கத் தில் சுகா தா ர மற்ற முறை யில் உணவு பண் டங் கள் தயா ரிக் கப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தாக ரயில் பய ணி கள் புகார் தெரி வித் த னர்.
இது கு றித்த செய்தி தின க ரன் நாளி த ழில் கடந்த 30ம் தேதி வெளி யா னது. இதன் எதி ரொ லி யாக வணி கப் பி ரிவு அதி கா ரி கள் மற் றும் உணவு பாது காப்பு தர நிர் ணய குழு வி னர் நேற்று முன்தினம் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது உண வ கத் தில் உள்ள பொருட் கள் வைப்பு அறை யில் இருந்த காய் க றி கள், சமை யல் எண் ணெ யின் தரத் தை யும், மசாலா பொருட் க ளின் காலா வதி தேதி ஆகி ய வற் றை யும் ஆய்வு செய் த னர். பின் னர், சமை யல் அறை யில் உண வு கள் சுகா தா ர மான முறை யில் தயா ரிக் கப் ப டு கி றதா என் பதை நேரி டை யாக சோதனை செய் த னர்.
மேலும், தயா ரிக் கப் ப டும் உணவு வகை கள் சரி யான அள வில் பார் சல் செய் யப் ப டு கி றதா என் ப தை யும் சோதனை செய் த னர்.
அதைத் தொ டர்ந்து, ரயில் நிலைய பிளாட் பா ரத்தை ஆக் கி ர மித்து திறந்த வெளி யில் உணவு தயா ரிக் கக் கூடாது, உண வ கத் தில் இருந்து வெளி யே றும் கழி வு களை தண் ட வா ளப் பகு தி யில் வீசா மல் குப் பைத் தொட் டி கள் மூலம் அகற்ற வேண் டும், உணவு பண் டங் களை தர மான முறை யில் தயார் செய்ய வேண் டும் என் றும், உண வ கத் திற்கு வரும் ரயில் பய ணி க ளின் தேவை கள் அறிந்து செயல் பட வேண் டும், என்று உண வக உரி மை யா ளர் க ளுக்கு அதி கா ரி கள் உத் த ர விட் ட னர்.

DINAMALAR NEWS


வைத்தீஸ்வரன்கோவிலில் ஓட்டல் உணவை சாப்பிட்ட 27 பேருக்கு வாந்தி, மயக்கம்

சீர் காழி, செப். 2:
நாகை மாவட் டம் சீர் காழி அருகே வைத் தீஸ் வ ரன் கோ வில் மேல வீதி யில் ஒரு நாடி ஜோதிட நிலை யம் உள் ளது. இங்கு கேர ளாவை சேர்ந்த ஒரு குடும் பத் தி னர் நேற் று முன் தி னம் மாலை ஜோதி டம் பார்க்க வந் த னர். அப் போது அவர் க ளுக்கு ஜோதி டம் பார்த்த நாடி ஜோதி டர், பரி கா ர மாக 27 பேருக்கு உணவு வழங்க வேண் டுனெ கூறி னார். இதை ய டுத்து ஜோதிட நிலை யத் திற்கு எதிரே உள்ள ஒரு ஓட் ட லில் விளக் கு முக தெருவை சேர்ந்த 27 பேருக்கு உணவு வாங்கி கொடுத் த னர்.
அந்த உணவை சாப் பிட்ட 27 பேருக் கும் இரவு முதல் நேற்று காலை வரை வாந்தி, வயிற் றுப் போக்கு, மயக் கம் ஏற் பட் டது. பாதிக் கப் பட்ட அனை வ ரும் வைத் தீஸ் வ ரன் கோ வில் அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் ட னர். அங்கு அவர் க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப் பட்டு வரு கி றது.
இது கு றித்து தக வல் அறிந்த வட் டார மருத் துவ அலு வ லர் ரம்யா, உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் சேகர், தவ பாண்டி, சுகா தார ஆய் வா ளர் வெங் க டே சன் ஆகி யோர் மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற் ற வர் க ளி டம் விசா ரணை நடத் தி னர். பின் னர் பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு உணவு வழங் கப் பட்ட ஓட் ட லுக்கு சென்று சோதனை நடத்தி அங்கு தயா ரிக் கப் பட்ட உணவு மாதி ரியை சேக ரித்து, ஆய் வுக்கு தஞ் சைக்கு அனுப்பி வைத் த னர்.

Intensive drive to ensure food safety

The food safety wing has begun an intensive drive to ensure food safety standards in hotels and restaurants during the festival season.
Following a directive of the Commissioner of Food Safety, the drive will be carried out under K. Anil Kumar, Joint Commissioner of Food Safety (Administration and Legal), D. Ashrafudin (Jt. Commissioner, Enforcement) and G. Gopakumar, who will be in charge of three zones in the State, and will engage 17 squads of food safety officers for inspections.
In Thiruvananthapuram district, 34 food businesses were inspected at Neyyattinkara, Kovalam, Vembayam, Varkala and Killipalam, and the operations of Crescent Hotel at Kowdiar, Madan tea stall at Thycaud, the production unit of MRA Bakery at Killipalam and another bakery unit at Vembayam have been stopped by officials for serious violations of safety standards.
Fine was imposed on 23 eateries and improvement notices were served on 24 others. Officials also destroyed one lot of ‘Bombay Sweet,’ which was found to contain non-permitted or banned synthetic colours, from an outlet at Thycaud.
Similar raids are being carried out by the special squads in all districts, an official release said here on Friday.

Penalty imposed on defaulting Food Business Operators

Port Blair
Two Food Business Operators; one from Kalighat, Diglipur and one from Billiground, Mayabunder were adjudicated for violation of various sections of Food Safety and Standard Act, 2006 by the Adjudicating Officer (District Magistrate), Mayabunder, N&M Andaman. A penalty of Rs.10,000/- was imposed on each Food Business Operator.
Also, three petty Food Business Operators were compounded and a penalty of Rs.1000/- was imposed on each by the Designated Officer (Food Safety), N&M Andaman for contraventions of different sections, rules and regulations of the Act. An amount of Rs.23,000/- in total was realized as fine from the offenders during the month of August.
Further, the Food Business Operators of the district have been advised to strictly abide by the Food Safety and Standards Act, Rules and Regulations made thereunder, and if anyone found violating, will be dealt as per law.