Feb 17, 2017

காலாவதியான உணவுப் பொருட்கள் அழிப்பு!

திருச்சி அருகே காலாவதியான குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்களை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர்.
திருச்சி அடுத்த சமயபுரம் மற்றும் கண்ணூர் பேரூராட்சியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காலாவதியான உணவுப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அதிகாரிகள் இன்று அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், சுமார் 500 லிட்டர் குளிர்பானம் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், பிஸ்கட் உள்ளிட்ட சில உணவு பொருட்களும் அழிக்கப்பட்டன.

No comments:

Post a Comment