Mar 23, 2017

தரம் குறைவான அப்பளம் தயாரித்தவருக்கு அபராதம்

சேலம்: தரம் குறைவான அப்பள தயாரிப்பில் ஈடுபட்டவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ஒருநாள் சிறை தண்டனை அளித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம், சூரமங்கலம் மூலைப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பீட்டர், 42. இவர், அப்பளம் தயாரித்து விற்று வந்தார். 
கந்தம்பட்டியில் உள்ள இவரது உற்பத்தி இடத்தில், 2016 செப்., 27ல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்பளத்தை ஆய்வுக்கு அனுப்பியதில், அது தரக்குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண் - 4ல் நடந்து வந்தது. 
நேற்று வழங்கிய தீர்ப்பில், பீட்டருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், நீதிமன்றம் கலையும் வரை, ஒருநாள் சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் லிங்கம் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment