May 5, 2017

ஆயில் நிறுவனத்தில் சோதனை போலி லேபிள்கள் சிக்கின

சூரமங்கலம்: ஆயில் நிறுவனத்தில் நடந்த சோதனையில், பிரபல நிறுவனங்களின் போலி லேபிள்கள் சிக்கின. சேலம், அரிசிபாளையம், சாமிநாதபுரம் சாலையில், ஜெயசக்தி ஆயில் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு, பல்வேறு எண்ணெய்கள் தயாரிக்கின்றனர். அங்கு, எண்ணெய்களில் கலப்படம் செய்து, ஆயில் நிறுவனங்களின் லேபிள்களை போலியாக ஒட்டி விற்பதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 
அங்கு, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று சோதனை நடத்தினர். அதில், சன்பிளவர் ஆயில் நிறுவனம் உள்பட, பல்வேறு போலி நிறுவன லேபிள்கள் இருந்தன. அதை ஒட்டி, ஆயில் டின்களில், எண்ணெய் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. லேபிள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரல்களில் உள்ள எண்ணெயை, ஆய்வுக்கு அனுப்ப, எடுத்துச்சென்றனர். இதுகுறித்து, நிறுவன உரிமையாளருக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment