May 25, 2017

பான் மசாலா, குட்கா தடை ஓராண்டு நீட்டிப்பு

தமிழகத்தில், பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்வதற்கான தடை, ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.குட்கா, பான் மசாலா போன்றவற்றில், புகையிலை மற்றும் நிக்கோட்டின் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை, உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, குட்கா, பான் மசாலா, புகையிலை, நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்கள் தயாரிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
அது வரும், 23 முதல், ஓராண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உணவு பாதுகாப்பு கமிஷனர், அமுதா பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment